சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு;அதனாலேயே சமாதான முயற்சி முறிவு!அம்பலப்படுத்துகிறார் எரிக் சொல்யஹய்ம்


"இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வேயின் சர்வ தேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான எரிக்சொல்ஹெய்ம்.பி.பி.ஸியின் ஹார்ட் "டோக்"நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில்இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின்முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கானஅனுமதியைப் பெறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.

இது தொடர்பாக பல உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
எனினும் அந்த மக்களுக்கு நாங்கள் எதற்காக நிதி வழங்குகிறோம் என்பதை எமது மக்களுக்குக் காண்பிக்க வேண்டும்.இதற்காக முகாம்களுக்குச் செல்ல அனுமதி அவசியம்.
போராட்டத்தை அமைதி வழியில் முன்னெடுக்க வேண்டும்
இலங்கையைப் பொறுத்தவரை ஆயுத மோதல் முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழ் மக்கள் தமது போராட்டத்தை அமைதி வழிகளில் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன் தாராள மனோபாவமுள்ள பல் கலாசாரதேசமொன்றை உருவாக்க முயல வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் பேசுவது என்பது நாங்கள் மாத்திரம் மேற்கொண்ட முடிவல்ல. இலங்கை அரசின் வேண்டுகோளின்பேரிலேயே இதனைச் செய்தோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி என அனைவரும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். உற்சாகப் படுத்தினர். நாங்கள் எப்படி மாட்டோம் எனக் கூற முடியும்?

விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளில் ஈடுபட்டதைச் சரியான விடயமாகவே கருதுகிறேன்.
என்றாலும், இறைமையுள்ள அரசை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட நான் முயலவில்லை.
எமது இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு மிக நெருக்கமாக வந்தது.
சமாதானப் பேச்சுகளின் காலத்தில் ஆகக் குறைந்தது ஆயிரம் உயிர்களையாவது காப்பாற்றினோம்.

விடுதலைப் புலிகளின் தலைவரை 10 தடவைகளுக்கு மேல் சந்தித்தேன். சந்திக்க வேண்டிய தேவை இருந்தது.அவரைச் சந்தித்த பல தமிழ்த் தலைவர்கள் நீங்கள்தான் கடவுள், நீங்கள் தமிழ் மக்களுக்குக் கொடை என மாத்திரம்தெரிவித்தனர். ஆனால் நான் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினேன்.அரச தலைவர்களுக்கும் இதுவே இடம்பெற்றது.

மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசி சமாதானத் தீர்விற்கு முயன்றதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஓரளவு சட்டபூர்வதன்மையை வழங்கினேன் என்பது உண்மைதான்.
சர்வதேச சமூகமும் இதனைத்தான் எதிர்பார்த்தது.

பிரபாகரன் செய்த பெரும் பிழை என்னவென்றால், சமஷ்டியை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.பிரபாகரனும் இலங்கை அரசும் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய அபாயத்தை எதிர்கொள்ளத் தயாராகஇருக்கவில்லை.

உண்மையில் என்ன நடைபெற்றது என்பதனை அறிய முடியாமல் உள்ளது
பிரபாகரனின் கூற்றுகளை நான் நம்பினேன். அவர் இராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாதச் செயல்கள் சிறிது காலத்திற்குநிறுத்தப்படும் என உறுதியளித்தார். அதனைக் காப்பாற்றினார். எனினும், சில மாதங்களுக்குப் பின்னர் அவரால் அதனைப்பின்பற்ற முடியவில்லை.
மோதலின் இறுதிக் காலங்களில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைவதே ஒரே வழி என விடுதலைப் புலிகளுக்குத்தெளிவாகத் தெரிவித்தோம்.

வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடையுமாறும், ஒலிபெருக்கி மூலம் நோக்கத்தை இராணுவத்துக்குத் தெரிவிக்குமாறும்கூறினோம்.அவர்கள் அதனைச் செய்ய முயன்றனர். எனினும், கொல்லப்பட்டனர்.உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை அறியமுடியாமலுள்ளது.

எனினும், அவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டமை தெளிவாகின்றது.
என்ன நடைபெற்றது என்பது தெரிய வரவில்லை. தெரிய வருவதற்கு பல வருடங்கள் எடுக்கலாம். விடுதலைப் புலிகள் சரணடைவதை இலங்கை இராணுவம் வேண்டுமென்றே அலட்சியம் செய்ததா என்பதும் எமக்குத் தெரியாது என்றார் அவர்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.