கடற்புலிகளின் கட்டமைப்புகள் - மிரண்டு போன ஸ்ரீலங்கா கடற்படை..

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.


இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலில் கடற்படையினரின் ‘அரோ’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதி, கடற்படையின் P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை.

கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடிக்கைகள் மட்டும் போதாது என்று, தரைவழி நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

மூன்று வாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும், இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றன.
கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப ஆய்வு:அங்கதன்
வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது தாக்குதல் கடற் கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இரவு 11.28 மணியளவில் கரும்புலிகளின் தாக்குதல் படகு, கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிகளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 ஆவது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன், படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.

அத்துடன் லெப். பெரேரா மற்றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேரமும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற் கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
அது கடற்படையினரின் கண்ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால், அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப்புக் கொமாண்டோ அணியினரின் ‘அரோ’ கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமடக்கித் தாக்குதல் நடத்தினர்.

15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு ‘அரோ’ வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப் பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால், கடற்படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.இதன்பின்னர் தான் கடந்த 8 ஆம்; திகதி முலலைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்குதல் படகைக் கடற் கரும்புலிகள் மூழ்கடித்திருக்கிறார்கள்.

இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடந்திருகிறது. கடற் கரும்புலிகளோடு கடற்புலிகளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு ‘சுப்பர் டோறா’ மூழ்கடிக்கப் பட்டதாகவும், மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப் பட்டதாகவும், 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால், முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில், கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வலயங்கள் அமைத்து தமது வௌ;வேறு விதமான 50 இற்கும் அதிகமான போர்க்கலங்களை நிறுத்தியிருக்கிறது.

அதுவும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோரப் பகுதியானது - சாலைக்குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.இந்தநிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரியமாகவே இருக்கிறது.ஆனாலும், கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகுகள் மூலமும், அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும், அதையடுத்து பீரங்கிப் படகுகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

கடைசியும் நான்காவதுமான கண்காணிப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாகவே நடமாடுகின்றன.

அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதிவேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள், ஆழ்கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந்த தாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

கடற்புலிகளின் நோக்கம் நிச்சயமாக ஒரு வலிந்த தாக்குதலுக்கான பயணமாக இருக்கவில்லை என்பதே உண்மை.அவர்கள் கடல்வழி விநியோகப் பயணங்களை மேற்கொண்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமது விநியோக நடவடிக்கைக்குக் குறுக்கே கடற்படையினர் வந்தபோது அந்தப் படகுகளைத் தாக்கி அழித்திருக்கின்றனர்.


கடற்புலிகளை 15 கி.மீ நீளமான கரையோரத்துக்குள் முடக்கியிருக்கின்ற போதும் - அவர்களின் கடல்வழி நடவடிக்கைகைகள் –விநியோகங்கள் - தாக்குதல்களை முடக்க முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை.கடற்புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல் சூசை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வில் பேசிய போது - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி;ச் சண்டைகள் கடலிலேயே நடைபெறும் என்று கூறியிருந்தார்.


அவர் கூறியபோது கிளிநொச்சி புலிகளிடம் இருந்தது. வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு என்பன புலிகளிடம் இருந்தன.அந்த உரையை இப்போதைய நிலையுடன் ஒப்பிட முடியா விட்டாலும் - இப்போதைய சண்டைகளை இறுதிப் போராக அரசதரப்புச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் கடலில் சண்டைகள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.

ஒரு காலத்தில் கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல்களைத் தடுத்து விடுவோம். இனிமேல் அவர்கள் நெருங்கவே முடியாது என்று மார்தட்டிக் கொண்டிருந்த கடற்படை அண்மைக் காலத்தில் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளை கரும்புலித் தாக்குதல்களில் பறிகொடுத்திருக்கிறது.

முல்லைத்தீவுக் கடலில் கடைசியாக நடந்திருக்கின்ற சண்டையின் போது கடற்படையினர் கரும்புலிகளின் ஒரு படகை மூழ்கடித்திருப்பது உண்மை. ஆனால், மற்றைய படகு கடற்படைப்படகு மீது மோதி வெடித்து அதை நாசப்படுத்தியிருக்கிறது.
ஆனால், கரும்புலிகளின் ஒரு படகு வெடித்துச் சிதறும் காணொளிக் காட்சியைத் தான் கடற்படை வெளியிட்டிருக்கிறது.

இப்போது கடற்படைக்கு ஒரு பெரிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம், தாக்குதல் தளபதி சின்னக்கண்ணன் மற்றும் சிலர் சாலையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.கடற்புலிகளின் கடைசித் தளமான சாலையும் கைப்பற்றப்பட்டு விட்டது. உடையார்கட்டில் இருந்த புலிகளின் நீர்மூழ்கிப் படகு தயாரிப்பு தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு விட்டது. அங்கிருந்த நீர்மூழ்கிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டு விட்டது.

ஆனாலும், கடற்புலிகள் தாக்குகிறார்கள் என்று எப்படி தகவல்களை வெளியே விடுவதென்ற சிக்கல் படைதரப்புக்கு இருந்து கொண்டிருக்கிறது.இதனால் தான் முல்லைத்தீவுக் கடலில் நடக்கின்ற சண்டைகள் பற்றிய தகவல்கள் முடிந்த வரைக்கு மறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதிலும், புலிகள் தரப்பு ஏதாவது செய்தியை வெளியே கசிய விட்டால் மாத்திரமே பாதுகாப்புத் தரப்பும் அந்தச்; சண்டை பற்றிய தகவலை வெளியிடும் போக்கு அவதானிக்கப் பட்டிருக்கிறது.

கடற்புலிகள் முடக்கப்பட்டே விட்டார்கள் என்ற கதை கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது தான் கடைசியாக ‘சுப்பர் டோறா’ மூழ்கடிக்கப் பட்டிருக்கிறது.கடற்புலிகள் இன்னமும் பலமிழந்து விடவில்லை என்பதை, அவர்களின் விநியோக - தாக்குதல் செயற்பாடுகளை படைத்தரப்பினால் முடக்க முடியாதிருப்பதைக்;; கொண்டே உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இந்தநிலையில் தான் இரணைப்பாலையில் நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கொல்லப்பட்டு விட்டதாக படைதரப்பு அறிவித்தது.

பின்னர் ஒரு கட்டத்தில் அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறியது. கடைசியாகக் காணாமற் போய்விட்டதாகவும் சொல்லியது.ஆக எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? ஏதைச் சொல்லாமல் மறைப்பது என்ற குழப்பம் படைத்தரப்புக்கு உருவாகத் தொடங்கி விட்டது.

கடற்புலிகளின் சில தளபதிகள் சண்டைகளில் மரணித்திருக்கின்ற போதும் அவர்களின் செயற்பாடுகளில் தொய்வோ - தடங்கலோ ஏற்படவில்லை என்பது உறுதியாகவே தெரிகிறது.

அவர்களின் இந்தப் பலம் தான் கடற்படையை - அரசாங்கத்தை அதிர்ச்சியோடு பார்க்க வைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கும் கரும்புலித் தாக்குதல் படகுகளை வடிவமைத்திருக்கின்ற முறையும், நீர்மூழ்கிப் படகை வடிவமைத்திருக்கின்ற தொழில்நுட்பமும்; படைத் தரப்பை ஆச்சரியத்தின் விளிம்புக்கே கொண்டு சென்றிருக்கிறது.

சொந்தமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடற்புலிகள் தம்மை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது தான்; பலருக்கும் தெரியவந்திருக்கிறது.

உலகில் கடற்படை ஒன்றை வைத்திருக்கின்ற போராளி அமைப்பாக கருதப்பட்ட புலிகள் - நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும், உற்பத்தி செய்யும் அமைப்பாக இருப்பது உறுதியாகியிருப்பதானது சர்வதேசத்தையே ஆச்சரியத்தில்; உறைய வைத்திருக்கிறது.

சர்வதேச நாடுகளின் நிதியுதவியிலும், அவர்களின் ஆயுதங்களையும் நம்பி சண்டையை நடத்திக் கொண்டிருக்கும் அரசபடைகளோடு ஒப்பிடும் போது - கடற்புலிகளின் வளர்ச்சியும் அவர்களின் செயற்பாடுகளும் அரசதரப்பை மிரள வைப்பதில் ஆச்சரியமில்லை.

இதனால் தான் கடற்புலிகளுக்கென்று ஒரு சிறு கடற்பகுதியையேனும் விட்டு வைக்கக் கூடாதென்ற நோக்கில் தரைப்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இப்போது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உகந்த பகுதியாக இருப்பது 15 கி.மீ கடலோரப் பகுதியே என்ற போதும் இதையும் கைப்பற்றும் முயற்சிகளில் படைத்தரப்பு இறங்கியிருக்கிறது.

ஒரு புறத்தில் 55 ஆவது டிவிசன். மறுபுறத்தில் 59 ஆவது டிவிசன். இந்த இரண்டின் நடுவே கடற்புலிகளின் படகுப் பயணங்கள் தொடர்கின்றன.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கூறியது போன்று - கடலில் சண்டைகள் நடக்கும் வரைக்கும் - கடற்புலிகளின் பயணங்கள் தொடரும் வரைக்கும் தரையில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கவோ - நிறுத்தவோ - அழிக்கவோ முடியாது.

நன்றி: நிலவரம்

சிக்கல் நிறைந்த போர்களத்தில் அடுத்து நடக்க போவது என்ன ?


வன்னிச் சமர் இப்போது புதுக்குடியிருப்பின் எல்லைகளைக் கடக்கின்ற நிலையை அடைந்திருக்கிறது. புதுக்குடியிருப்புச் சந்தியை இந்த மாதத் தொடக்கத்தில் கைப்பற்றிய படையினர், புதுக்குடியிருப்புப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்ற இன்னும் சண்டையிட வேண்டிய நிலையில் உள்ளனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவோ, பூநகரியைக் கைப்பற்றவோ, மாங்குளம் அல்லது மல்லாவி, துணுக்காய், முல்லைத்தீவு நகரங்களைக் ஆய்வு:அங்கதன்
கைப்பற்றவோ, படையினர் இதுபோன்று அங்குலம் அங்குலமாகச் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. மேற்படி நகரங்களின் சில பகுதிகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றை முழுமையாகக் கைப்பற்றும் வாய்ப்பு படையினருக்குக் கிடைத்து வந்தது.ஆனால், புதுக்குடியிருப்பு நகரின் ஒவ்வொரு வளவிலும், ஒவ்வொரு வீட்டு முற்றத்திலிலும், குச்சொழுங்கைகளிலும் சண்டைகள் நடக்கின்றன.

புதுக்குடியிருப்பு புலிகளின் பலமான கோட்டையாக இருந்த பகுதி. அதை இழப்பதற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை.இதனால் அவர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்னகர்வைத் தடுத்து வருகின்றனர்.

இது முதற் காரணம்.புலிகளின் கட்டுப்பாட்டில் இப்போது சுமார் 26 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதி மட்டுமே இருக்கிறது.இந்தப் பகுதியையும் இழந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருக்கிறது. இதனால் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டு படைநகர்வைத் தடுக்க முனைகின்றனர்.


"பரந்த பிரதேசத்துக்குள் புலிகளைச் சண்டைக்கு இழுத்து, சாதகமான இடத்தில் ஊடறுத்து நுழையும் படைத்தரப்பின் வழக்கமானதந்திரோபாயத்தை இந்தக் களமுனையில் கையாள்வது கடினமானது.அதைவிடப் புலிகள் இந்தப் பகுதியில் கனரக இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்"

இது இரண்டாவது காரணம்.புதுக்குடியிருப்புச் சண்டை குறுகிய பிரதேசத்துக்குள் தான் நடக்கிறது. ஆனால் படைத்தரப்பு மிகப் பெரியளவிலான படைபலத்தை இங்கு குவித்து வைத்திருக்கிறது.இலங்கை இராணுவம் மட்டுமன்றி உலகின் எந்தவொரு இராணுவமுமே இத்தகையதொரு சிறிய பிரதேசத்துக்குள், குறைந்த எண்ணிக்கையான ஆட்பலத்தைக் கொண்ட ஒரு படையணியை அழிப்பதற்கு, இந்தளவு பிரமாண்டமான படையணிகளையோ, சுடுபல சக்தியையோ வளங்களையோ பயன்படுத்தியதாக வரலாறு இல்லை.

கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55 ஆவது டிவிசன்.கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் மேற்குப் பகுதியில் பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58 ஆவது டிவிசன்.இந்தப் பாதுகாப்பு வயலத்தின் தெற்மேற்குமற்றும் மேற்குப் பகுதிகளில் 53 ஆவது மற்றும் 68 ஆவது டிவிசன்.தெற்குப் புறத்தில 59 ஆவது டிவிசன்.இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குறுகிய நிலப்பரப்பைச் சுற்றியதாக 5 டிவிசன் படையினர் முன்னரங்குகளை அமைத்திருக்கின்றனர்.இவற்றில் 59 ஆவது டிவிசன் இதுவரையில் முன்னகர்வுகளை மேற்கொள்ளாமல் வட்டுவாகல் பாலத்தோடு தற்காப்பு நிலைகளை அமைத்து நிற்கிறது.

ஆனாலும் வரும் நாட்களில் இந்த டிவிசன் மற்றொரு களமுனையைத் திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.காரணம், இது வரையில் 59 ஆவது டிவிசன் 3 பிரிகேட்களைக் கொண்டிருந்தது. இப்போது இந்த டிவிசனில் மேலதிகமாக இரண்டு புதிய பிரிகேட்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.அவற்றில் 59-4 பிரிகேட்டுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பவர் விசேட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியான லெப். கேணல் தம்மிக ஜெயசுந்தர.இவர் முகமாலைக் களமுனையில் இயந்திர காலாற்படைப் பிரிவின் பதில் தளபதியாக இருந்தவர்.பின்னர் கிளிநொச்சிக் களமுனையில் இருந்த 57-2 பிரிகேட் தளபதி லெப். கேணல் சேனாரத் பண்டார வெளிநாடு சென்றிருந்தபோது, அந்த பிரகேட்டை வழிநடத்தியவர்.மீண்டும் இயந்திர காலாற்படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அவர், இப்போது முல்லைத்தீவுக் களமுனைக்கு மாற்றப் பட்டிருக்கிறார்.


இதனால் படைத்தரப்பு கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் தென்முனையில் புதிய களமுனை ஒன்றைத் திறக்கும் சாத்தியங்கள் உள்ளன.
புதுடிக்குடியிருப்பு நகருக்கு தெற்கேயிருக்கின்ற மந்துவில் சந்தியையும், அதனைச் சார்ந்த நந்திக்கடல் நீரேரியின் மேற்கு, வடக்குப் பகுதிகளையும் கைப்பற்ற படைத்தரப்பு இப்போது பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது.68 ஆவது டிவிசன் இந்தப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையாகச் சண்டையிட்ட போதும் இந்தப் பகுதியில் புலிகள் பலமாக இருந்து வருகின்றனர்.

கேணல் ரவிப்பிரியவின் தலைமையிலான 68 ஆவது டிவிசனின் இரண்டு பிரிகேட் படையினர் இந்தப் பகுதியில் முன்னேறி வருகின்ற நிலையில், புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களால் அவர்களுக்குப் பாரிய இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருந்த போது கூட (24 ஆம் திகதி இரவு) மந்துவில் பகுதியில் கடுமையான சண்டைகள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.இந்தச் சண்டைகளில் படுகாயமுற்ற பெருந்தொகைப் படையினர் கள வைத்தியசாலைகளுக்கு எடுத்து வரப்படுவதாகவும், பெருமளவு படையினர் கொல்லப் பட்டிருப்பதாகவும் களமுனைத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. எனினும், இதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இப்பத்தி எழுதப்படும் வரையில் இருதரப்பில் இருந்தும் வெளியாகவில்லை.

புதுக்குடியிருப்புக்கு கிழக்கே முல்லைத்தீவு வீதியையும், அதன் இரு புறங்களையும் மையமாகக் கொண்டு முன்னேறும் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் 53 ஆவது டிவிசனும் புலிகளின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.புதுக்குடியிருப்புச் சந்தி, அதன் பின்னர் வைத்தியசாலைப் பகுதி, குழந்தை இயேசு கோவிலடி, சிவன் கோவிலடிப் பகுதிகளைக் கடக்க பல வாரங்கள் சென்றுள்ள இந்தப் படைப்பிரிவு, ஒவ்வொரு அங்குல நிலத்துக்காகவும் கடுமையாகப் போரிட வேண்டியிருக்கிறது.இலங்கை இராணுவத்தின் முதலாவது றிசேவ் தாக்குதல் படைப்பிரிவான 53 ஆவது டிவிசன் எதிர்பார்க்கப் பட்டது போன்று வேகமாக முன்னேற முடியாதளவுக்குப் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் வீரியம் மிக்கதாகவுள்ளது.

இந்தச் சண்டைகளில் படைத்தரப்புக்கு பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.அதேவேளை புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே, இரணைப்பாலைப் பகுதியில் 58 ஆவது டிவிசன் இப்போது புதுமாத்தளனுக்கான வீதியைத் துண்டித்து விட்டு, அடுத்த கட்டமாக கரையோரப் பாதுகாப்பு வலயத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.புதுக்குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றிய பின்னரே பாதுகாப்பு வலயத்துக்குள் காலடி எடுத்து வைப்பதே படைத்தரப்பின் திட்டமாகத் தெரிகிறது.இப்போதைய நிலையில் கடலேரியைக் கடந்து பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது ஆபத்தாக முடியலாம் என்று படைத்தலைமை கருதுகிறது.காரணம், புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் சில பிரதேசங்கள் புலிகளிடம் எஞ்சியிருக்கின்ற நிலையில் பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் போது பொதுமக்கள் பரவலாகச் சிதறி ஓடுவார்கள்.அவர்களோடு புலிகளும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி விடுவார்கள் என்ற பயம் படைத்தரப்புக்கு இருக்கிறது.எனவே புதுக்குடியிருப்பின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி விட்டு, அடுக்கடுக்கான பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி, பெருமளவு படையினரை முன்னிறுத்திக் கொண்டு தான், பொதுமக்களை உள்வாங்க திட்டமிடப் பட்டிருக்கிறது.

"புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் இரத்தினம் மாஸ்ரரின் வழிகாட்டலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் அணிகளுக்கு தளபதி தோமஸ் பொறுப்பாக இருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறது."

அடுத்த கட்டமாகக் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்கும் போது, நிலைமையைச் சமாளிப்பது சுலபம் என்று கருதுகிறது படைத்தரப்பு.அதேவேளை போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாகப் படைத்தரப்பு கூறும் நிலையில், புலிகள் இந்தத் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் 55 ஆவது டிவிசன் மெதுவான முனனகர்வில் ஈடுபட்டு வருகிறது.பெருமெடுப்பில் தாக்குதல் நடத்துவதற்கும் முன்னேறுவதற்கும் இந்த டிவிசனுக்கு இயற்கை ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.புதைமணல் ஊடாக வாகனங்களை முன்னகர்த்துவது மிகச் சிரமம். கடலேரித் தொடுவாய்கள் அடுத்தடுத்து இருப்பதால் அவற்றைக் கடந்து சென்று தாக்குதல் நடத்துவது, மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்வது என்பன சிக்கலாக உள்ளன.அதைவிட ஒடுங்கலான இந்தக் களமுனையில் படை முன்னகர்வை குறிப்பிட்ட பிரதேசத்தின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பரந்த பிரதேசத்துக்குள் புலிகளைச் சண்டைக்கு இழுத்து, சாதகமான இடத்தில் ஊடறுத்து நுழையும் படைத்தரப்பின் வழக்கமானதந்திரோபாயத்தை இந்தக் களமுனையில் கையாள்வது கடினமானது.அதைவிடப் புலிகள் இந்தப் பகுதியில் கனரக இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இங்கு ‘கனொன்’ எனப்படும் 30 மி.மீ. பீரங்கிகள் மற்றும் 23 மி.மீ. பீரங்கிகளைப் புலிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.இவற்றின் சுடுதிறன் 5 முதல் 7 கி.மீ. வரை இருப்பதாலும், இது பரந்த வெளியான களமுனையாக இருப்பதாலும், கனரக இந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பது படையினருக்கு சிக்கலாக உள்ளது.
இதனால் மெதுமெதுவாகவே இந்த டிவிசன் முன்னகர்ந்து வருகிறது.மேலும் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் 55 ஆவது டிவிசன் உடனடியாகப் பிரவேசிக்கும் போது அங்குள்ள மக்களை வெளியே அனுப்புவதிலும் சிக்கல்கள் உள்ளன.55 ஆவது டிவிசன் யாழ் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முல்லைத்தீவுக் களமுனையில் உள்ள ஏனைய படைப்பிரிவுகள் அனைத்தும் வன்னிப்படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆயிரக் கணக்கான மக்கள் 55 ஆவது டிவிசன் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்தால் அவர்களைச் சமாளிக்கின்ற திறன் அந்தப் படைப்பிரிவுக்கு இல்லை.புவியியல் அமைப்பு ஒரு புறம் சிக்கலானது.இந்த டிவிசனிடம் பெருந்தொகையான மக்கள் வந்தால் அவர்களை யாழ்ப்பாணத்துக்கே கொண்டு செல்ல வேண்டும்.பெருந்தொகையான மக்களை யாழ்ப்பாணத்தில் பராமரிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் அவர்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லவே படைத்தரப்பு விரும்புகிறது.
எனவே, கரையோரப் பாதுகாப்பு வலயத்தின் வடக்குப் பகுதியில் நிற்கும் 55 ஆவது டிவிசன் அவ்வப் போது நெருங்கி வந்தாலும் அது இறுதித் தாக்குதலில் பங்கேற்பதற்கு சாத்தியங்கள் குறைவே.

புலிகளின் குறுகிய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைச் சுற்றித் தளமிட்டு நிற்கும் இந்தப் படைப்பிரிவுகள் அடுத்த கட்டமாக முன்னேறும் போது இப்போது நடக்கின்ற சண்டைகளை விட மோசமானதும் மூர்க்கமானதுமான நிலையை சண்டை அடையும்.அதேவேளை, படைதரப்புக்கு இப்போது பின்தளப் பகுதிகளின் பாதுகாப்பு பெரும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது.இந்த மாதத் தொடக்கத்தில் புலிகள் நடத்திய மிகப் பெரிய ஊடறுப்புத் தாக்குதல்களும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் அடிக்கடி நடந்து வருகின்;ற சண்டைகளும் படைத்தரப்புக்கு பின்தளப் பாதுகாப்புப் பற்றிய நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றன.இதன் காரணமாகப் படைத்தரப்பு தனது 57 ஆவது டிவிசனின் 5 பிரிகேட்கள், 58 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட், 59 ஆவது டிவிசன், 62 ஆவது டிவிசன், 63 ஆவது டிவிசன், 64 ஆவது டிவிசன் ஆகியவற்றை கிழக்கு வன்னியின் பின்தளப் பாதுகாப்புக்காகக் குவித்து வைத்திருக்கிறது.

இராணுவத்தினர் இப்போது புலிகளைக் குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கியிருக்கின்ற போதும் படைத்தரப்புக்கு ஆளணிப் பிரச்சினை வெளித் தெரியத்தக்க அளவுக்கு மோசமாகியிருக்கிறது.இதனால் தான் இராணுவத்தின் றிசேவ் நிலைப் படைப்பிரிவான 57 ஆவது டிவிசனில் கூட துணைச் சேவைப் படைப்பிரிவுகளை இணைக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.குறிப்பாக 57-1 பிரிகேட்டில் 7 ஆவது மற்றும் 10 ஆவது சிக்னல் படைப்பிரிவுகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இவை துணைச் சேவைப் படைப்பிரிவுகள்.
57 ஆவது டிவிசனில் 4 ஆவது பற்றாலியன் உள்ளிட்ட தேசிய காவற்படையின் பல பற்றாலியன்கள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.
இவை தொண்டர் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவை.தொண்டர் படைப்பிரிவுகள், துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் அதிகாரிகளால் இராணுவத் தளபதி பதவியையோ அதற்கடுத்த பதவி நிலைகளையோ கூட அடைய முடியாது.இரண்டாந்தர படைப்பிரிவுகளே இவை.

இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக கருதப்படும் 57 ஆவது டிவிசனில் இத்தகைய தொண்டர் படைகளையும், துணைச் சேவைப் படைகளையும் சேர்த்துக் கொள்ளும் அளவுக்குப் படைத்தரப்பில் ஆளணிச் சிக்கல் வலுவடைந்திருக்கிறது.முன்னரங்க நிலைகளுக்கு அனுபவம் மிக்க பற்றாலியன்களை அனுப்பியுள்ள படைத்தலைமை பின்தளப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற, புலிகளின் ஊடுருவல்களைத் தடுப்பதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.புலிகள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி வருகின்றனர்.இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருந்தபோது கூட, செம்பியன்பற்றுப் பகுதியில் சண்டை ஒன்று நடந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது.ஊடுருவியிருந்த புலிகள், படையினரை எதிர்கொண்டபோது தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியிருக்கிறார்கள். இதில் படையினர் சிலர் காயமுற்றதாகத் தகவல்.இதுபோன்ற மோதல்கள் பெருமளவில் நடக்கின்ற போதும் சிலவற்றைப் பற்றிய தகவல்கள் தான் வெளியே வருகின்றன.

புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் இரத்தினம் மாஸ்ரரின் வழிகாட்டலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் அணிகளுக்கு தளபதி தோமஸ் பொறுப்பாக இருப்பதாக இராணுவத் தரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறது.அதேவேளை பின்தளப் பகுதிகளில் தேடுதல்களை நடத்தி படையினர் பெரிதும் களைப்படைந்து போயிருக்கின்றனர்.
இந்தநிலையில புலிகள் முன்னரங்கப் பகுதிகளில் பெரும் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளலாம் என்றும் அவர்கள் இந்த பாரிய ஊடறுப்பின் மூலம் இழந்த பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்ற முனையலாம் என்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா எச்சரித்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் புலிகள் மட்டுமே நெருக்கடிகளைச் சந்திக்கவில்லை. படைத்தரப்பும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் வன்னிப் படைநகர்வை மேற்கொண்டிருக்கிறது.இரண்டு தரப்புமே கடுமையான, சிக்கல் நிறைந்த பாதையொன்றில் கால்வைத்துள்ள நிலையில், அடுத்த கட்டம் என்பது எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாத விடயமாகவே மாறியிருக்கிறது.

நன்றி: நிலவரம்

பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.

அரசியல் கோமாளிகள் என்று சொன்னான் பொன்சேகா. ஐயோ என்று பதறினோம் ஆறு கோடி தமிழரும். அமைதியாய் நின்றீர் நீர் அனைவரும், அதற்க்கு ஆம் என்று அர்த்தம் என்று இன்றுதான் புறிந்துகொண்டோம். பிறக்காத குழந்தைக்கும் சாவு கீதம் படுகிறார் ஈழத்தில். பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.

தமிழ் தமிழ் என்று கதற்றுகிரீர். அம்மா என்று கூட அழைக்காத குழந்தை அய்யோ என்று கதறுகிறதே அங்கே. தமிழனாக பிறந்த குழந்தை தலையின்றி கிடக்கிறதே. தமிழனின் சாவை தடுக்காத நீ தமிழனுக்கு தலைவனென்று ஏன் சொல்கிறாய் ? ஒரு தலைவன் ஒரு துரோகம் இன்னொரு தலைவன் இரு துரோகம் இன்னும் ஒருவன் பல துரோகம். துரோகத்தின் பாதையில் படையெடுத்து செல்கிறீர் தமிழகத்தின் கதி என்ன. யாரிடம் எங்களை ஒப்படைக்க போகிறீர்.

சாக்கடயாம் அரசியலில் குளிக்கிறீரே. அங்கே நம் தமிழர் பிணவாடை நாற்றத்தில் தவிக்கிறாரே. தலைவர்களை தலைக்குமேல் தூக்கி ஆடும் என் தமிழினமே, தமிழக இனமே, நம் உறவுகளை காக்க எந்த ஒரு தலைவன் குரல் கொடுத்தான் கூறுங்கள் பார்ப்போம். கட்சி புகழை பறைசாற்றும் தொண்டர்களே என் தமிழர்களே எந்த ஒரு தலைவன் ஆய்வு:

ஈழத்திகாக ஒரு ஆயிரம் பேரை திரட்டி ஒரு போராட்டம் நடத்தினான் கூறுங்கள் பார்ப்போம்.

புரட்சி இனத்தை போராட்ட இனத்தை குருட்டு பூனைகலாய் மாற்றிவிட்டீர் எம் தமிழக தலைவர்களே. கூட்டம் கூட்டமாக ஒன்று சேருகிறீர் தமிழினத்தின் எதிரிகளுடன் கூட்டணி சேருகிறீர் கருணாவும் நீயும் ஒன்றுதானா? நீயும் தமிழன்தான் நரிகளுடன் சேர்ந்துகொண்டு நாடாள நினைக்கிறீர் நாயைவிட கேவலமாய் நாளை உன்னை நடத்துவான். நரி என்ன செய்யும் என்று நம் தமிழ் பாடம் சொல்லுமடா. மானம் விட்டீர், மரியாதையை விட்டீர், உரிமை விட்டீர் தமிழ் உணர்வை விடாதீர் இல்லையேல் இவ்வுலம் உம்மை விட்டுவிடும்.


தமிழனுக்கு குரல் கொடுங்கள் தமிழன் உங்களுக்கு உயிர் கொடுப்பான் சான்று முத்துகுமார் மாற்றானுக்கு மயங்காதீர் அவன் உன் உயிரை எடுப்பன் சான்று உங்களுக்கு தெரியும் இனியாவது திருந்துங்கள் பொருள் பிச்சை கேட்ட காலம் போய் உயிர் பிச்சை கேட்கிறான் தமிழன் ஒருவன். தயங்காமல் முடிவெடுங்கள் தமிழர் இருக்கிறோம் ஆறுகோடிபேர்

ஈழத்தமிழர்களை காக்க கள்ளத்தோணியில் செல்வோம்: கலைஞருக்கு வைகோ பதில்


முதல்வர் கருணாநிதி நேற்று முன் தினம் இலஙகை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பற்றி விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான வைகோ பதில் அளித்து பேசியுள்ளார்.

அவர், ‘’வீரமானவர்கள் என்றால் கள்ளதோணியில் செல்லுங்கள் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அவசியம் இருந்தால் ஈழத்தமிழர்களை காக்க செல்வோம்.

முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசலாமா? வரும் தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது:வைகோ
டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் அரசியல் பிரிவு கவுன்சிலர் எரிக்கோசைல், டெல்லியில் உள்ள சுவீடன் நாட்டு தூதரகத்தின் அரசியல் பிரிவை கவனிக்கும் 2-வது நிலை செயலாளர் ஆஸ்கார் ஸ்கைட்டர் ஆகியோர் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.\


அப்போது, ‘’இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ராஜபக்சே எடுத்து வருகிறார். இதை கண்டித்து ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசு அவரின் கண்டனத்தை மறைத்து விட்டது.

வாஜ்பாய் அரசு இருந்தபோது இலங்கைக்கு ஆயுதங்களையோ, ராணுவத்தையோ அனுப்பவில்லை. தொடர்ந்து 5 ஆண்டுகாலம் இந்த நிலை நீடித்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்த போது தான் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் அரசு தமிழ் மக்களுக்கு கெடுதல் விளைவித்துள்ளது.அவர்களின் இந்த துரோகம் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கும்.

போரை நிறுத்துங்கள் என்று இதுவரை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியது இல்லை. ஆனால் இதுகுறித்து பிரதமர் பொய் சொல்வது அவமானமாக இருக்கிறது.

இலங்கையில் செத்து விழும் ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இந்திய அரசு எங்களை வற்புறுத்தவில்லை என்று இலங்கை மந்திரி கூறியிருக்கிறார்.

ஆனால் போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேசி வருவதாக பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

ஆர்பிஜி உந்துகணையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
மாத்தளன் மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த 25 வயதுடைய ரவீந்திரராசா சுதர்சினி என்ற பெண்ணின் காலிலேயே ஆர்பிஜி உந்துகணை துளைத்து வெடிக்காத நிலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் காலில் ஆர்பிஜி உந்துகணை வெடிக்காத நிலையில் துளைத்ததும் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தாதியர்களும் பெரிதும் அச்சமடைந்து ஆர்பிஜி உந்துகணை வெடிக்கப்போகிறதோ என்று கருதி விலகிச் சென்றனர்.



எனினும் ஆர்பிஜி உந்துகணை பாதுகாப்பாக வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டது. அதனையடுத்து துரிதமாக செயற்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்பிஜி உந்துகணையை எடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பயிற்றப்பட்ட ஒருவர் சாதூரியமாக செயற்பட்டு ஆர்பிஜி உந்துகணையை செயலிழக்கச் செய்தார்.

எந்தவிதமான அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கின்ற உபகரணங்களையும் மருந்துகளையும் பயன்படுத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்து நச்சுத்தன்மை உடலில் மேலும் பரவாத வகையில் பெண்ணின் பாதிக்கப்பட்ட காலை அகற்றினர் என்பது பாராட்டத்தக்கதாகும்.

நாள்தோறும் மக்களை கொன்று குவித்துவிட்டு பொய்யுரைக்கும் சிறிலங்கா

வன்னியில் நாள்தோறும் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து பொய்யுரைத்து வருகின்றது.
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய மிகச் அகோர வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின் போது 52 பேரின் உயிரிழப்புக்கள் மருத்துவமனையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாத்தளன், பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் அதிகளவில் மக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்ட நிலையில் சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் உடலங்களை புதைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை.

பெருமளவிலான மக்களை நேற்றும் படுகொலை செய்துவிட்டு தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றும் அங்குள்ள மருத்துவர்கள்தான் பொய் சொல்கின்றனர் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

வன்னியில் வான், தரைப் படையினர் இணைந்து கொடூரத் தாக்குதல்: 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை


வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இப்பகுதிகளை நோக்கி இன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்டதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் மாத்தளன் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இதே பகுதியில் மாத்தளன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையே இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகளவிலான தாக்குதல்கள் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களும் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டன.

இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இன்றைய தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கொல்லப்பட்ட ஏனையோரின் பெயர் விபரம் வருமாறு:

கந்தையா சுப்பையா (வயது 60)

செல்லத்துரை (வயது 77)

தினகரன் யாழியன் (வயது ஐந்தரை மாதம்)

பெருமாள் ரவிக்குமார் (வயது 28)

ரவீந்திரன் பிரியா (வயது 08)

தம்பையா (வயது 74)

பொன்னம்பலம் சிறீலக்சுமி ரஞ்சன் (வயது 52)

மாதவன் செல்லப்பா (வயது 65)

தியாகராசா நிசாந்தன் (வயது 19)

இராமகிருஸ்ணன் மேரி ஜெயசாந்தினி (வயது 09)

தம்பு மயில்வாகனம் (வயது 82)

பசுபதி சுதாகரன் (வயது 23)

தம்பு சுப்பிரமணியம் (வயது 74)

சந்தனம் காளியரத்னம் (வயது 59)

நவரட்ணம் நேசமலர் (வயது 52)

கந்தையா சுப்பையா (வயது 74)

விக்கி கண்ணம்மா (வயது 42)

செல்வராசா ராசம்மா (வயது 70)

தவக்குமார் டிந்து (வயது 09)

மார்க்கண்டு சசிகரன் (வயது 23)

சத்தியமூர்த்தி கௌரியம்பாள் (வயது 45)

சாரங்கன் தட்சாயினி (வயது 12)

வெள்ளைச்சாமி விதுசா (வயது 07)

நகுல்ராஜ் கிருஸ்ணரஜனி (வயது 35)

பரமேஸ்வரன் ஜெயரஞ்சனி (வயது 52)

அமிர்தலிங்கம் டிலக்சன் (வயது 10)

இராசேந்திரம் பிரதீபன் (வயது 29)

மதனவசீகரன் பிரவீணா (வயது 03)

ஆறுமுகம் கலைவாணன் (வயது 13)

மருதமலை தமிழினியன் ( வயது 05)

முருகாண்டி நிதியிம்பன் (வயது 06)

காளிதாசன் காவியன் (வயது 07)

மருதன் (வயது 08)

தேவசகாயம் கார்நிலா (வயது 10)

மலையாண்டி குபேரன் (வயது 14)

கிருபைராசா குமாரி (வயது 33)

தேவதாஸ் கார்த்திகாயினி (வயது 15)

ஏழுமலை கிருநாந்தி (வயது 13)

பார்த்திபராஜா பார்கவி (வயது 14)

தேவிதாசன் காவியா (வயது 13)

கதிரித்தம்பி இந்திரலிங்கம் (வயது 31)

சர்வானந்தகரன் நிசாந்தினி (வயது 24)

சே.ருக்குமணி (வயது 52)

மா.சசிகுமார் (வயது 23)

சு.பாலசிங்கம் (வயது 56)

ந.சோனியா (வயது 18)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயா் விபரம் கிடைக்கப்பெறவில்லை.




















வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம்


மோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு ஆதாரங்கள் உள்ளன: விடுதலைப் புலிகள்

பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் கூறியிருப்பதாவது:

ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வழிகாட்டியுள்ளது. பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவதை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் அறிவார்கள்.

சமீபத்தில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியபோது செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு பணியாளர் காயமடைந்தார்.

மேலும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை அரசு மருந்துப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவில் பொதுமக்களின் நிலை குறித்து ஆராய சர்வதேசப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மை வெளிவரும்.

பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வன்னி பகுதியில் இலங்கை இராணுவம் நேற்று நடத்திய தாக்குதல்களில் 57 தமிழர்கள் பலியானார்கள்.

அதே சமயத்தில், புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த சண்டையில் 41 விடுதலை புலிகளை கொன்று விட்டதாகவும், ஏராளமானமான ஆயுதங்களை கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

வன்னி மக்கள் சொந்தங்களை பிரிந்து வாழ நேரிட்டுள்ள துர்ப்பாக்கியம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

வடக்கில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களினால் பிரதேச மக்கள் தமது சொந்தங்களை பிரிந்து வாழ வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொதுமக்கள் சொந்தங்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெயர நேரிட்டுள்ளமையினாலும், இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்தங்களுடன் உரிய முறையில் தொடர்புகளை ஏற்படுத்த முடியாமையினாலும் சொந்தங்களை பிரிந்து வாழ நேரிட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.

குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் உயிருடன் இருக்கின்றனா அல்லது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரா என்பது குறித்து அறிந்து கொள்ள புலம்பெயர் சொந்தங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வரையறுக்கப்பட்ட வசதிகளின் காரணமாக உரிய முறையில் சொந்தங்களுடன் தொடர்புகளைப் பேண முடிவதில்லை என குறிப்பிடப்படுகிறது.

தேசியத் தலைவர் ஒருவரால்தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும்: தமிழகத்திலிருந்து ஒரு குரல்

தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது.

எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள். ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யும், காப்பாற்றும் என நினைத்தோம். எதுவும் நடக்கவில்லை. எல்லோரும் கழுத்தை அறுத்தார்கள். இப்போது ஒபாமாவிடம் போய் நிற்கிறோம். இவர்கள் மனது மாறி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.

பிறகு யாரால்தான் முடியும். தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும்.

5000 யானைகள், 1 இலட்சம் பேரைக் கொண்ட இப்ராஹிம் லோடியின் படையை பாபர் பானிபட் போரில் வெறும் 15,000 பேரைக் கொண்டு ஒரே நாளில் வெற்றி பெற்றார். வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒப்பாரிச் சத்தம் கேட்டது. பாபர் தன் சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் 'எல்லாம் வல்ல இறைவன் அருளால் காலையில் தொடங்கிய யுத்தம் மலைக்குள் முடிவுக்கு வந்தது. இந்தியாவும் எனக்குகிடைத்தது'. மன உறுதி மற்றும் போர் தந்திரத்தினால் தான் இது சாத்தியமானது.

வன்னியில் இப்போது 50,000 இராணுவத்தினர் முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராடுவதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை. தமிழகத்தில் வாழ்நாளில் போரை இது வரை பார்த்திராத இளைஞர்கள் 11 பேர் தீக்குளித்து உயிரை விட்டிருக்கிறார்கள். வன்னியில் தினமும் செத்து செத்து மடிவதை விட போரை சந்தித்து வெற்றி பெறுவது அல்லது வீர மரணம் அடைவதே மேல். அதை விடுத்து 'அவர் வந்து காப்பாற்றுவார்' 'இவர் வந்து காப்பாற்றுவார்' என்று நினைத்து அழுது கொண்டிருந்தால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

புதுக்குடியிருப்பில் சிக்கிக் கொண்டுள்ள 3 இலட்சம் பேரில் 25,000 பேர் வந்தால் போதும். வன்னி மக்களுடைய குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் புறப்பட்டால் போதும். தலைவருடைய கரங்களை பலப்படுத்தினால் போதும். சிங்களத்தின் பிடரியில் அவர் பேரிடி தருவார். வெற்றியை அவர் பெற்றுத் தருவார்.

கடைசி ஈழப் போரில் வெற்றி நமக்கு கிடைக்கும். தென்னிலங்கையில் எல்லா சிங்கள வீடுகளிலும் ஒப்பாரி ஒலி கேட்கும். ஏழேழு ஜென்மத்திற்கும் சிங்களவர்கள் தமிழர் தாயக பூமியை தொடக் கூட எண்ண மாட்டார்கள். உலகின் கண்கள் திறக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும் பேச்சு வார்த்தை என்று வலிய ஓடி வருவார்கள். அங்கீகாரம் தருவார்கள். .

புற நானூறு கண்ட ஒரு வீர இனத்திற்கு ஈழத்தை போரில் வென்றெடுப்பதுதான் பெருமை. பிறர் வந்து தங்க தாம்பாளத்தில் விடுதலையை வைத்து தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்காமல் அனைவரும் தேசியத் தலைவருடைய கரங்களை வலுப்படுத்த வேண்டும். போரில் இறங்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் தாகம் தணியும். ஈழம் அப்போதுதான் மலரும்

தமிழகத்திலிருந்து ஒரு குரல்

விடுதலைப் புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன


விடுதலைப் புலிகளின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக செயற்படுவதை விமானத் தாக்குதல்கள் காட்டுகின்றன என்று இந்திய முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடந்தவார வான் தாக்குதல் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது...

கடந்த 28ம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு, வடக்கில் இராணுவ இலக்கு ஒன்றின் மீதும் தெற்கில் கொழும்பில் பொருளாதார இலக்கு ஒன்றின் மீதும் 90 நிமிட இடைவெளியில் தாக்குதல் நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படைப் பி?வு 2007 மார்ச்சில் தாக்குதலை ஆரம்பித்தது முதல் கடந்த 28ம் திகதி வரை ஏழு வான்படைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. போர்க்களச் செய்திகளைத் தரும் புலிகளுக்காதரவான ஆங்கில மொழி இணையத்தளமான தமிழ்நெற், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் போர்முனைச் செய்திகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 28ம் திகதி விடுதலைப் புலிகளின் வான்படை தாக்குதல் நடத்திய பிறகு அது இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: மன்னாரிலுள்ள சிறீலங்கா இராணுவத்தின் பிரதான ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கித் தளமான தள்ளாடி இராணுவத் தளத்தின் மீது இரவு 10.30 மணியளவில் புலிகளின் விமானப்படை மூன்று குண்டுகளை வீசியுள்ளது. பின்னர சிறீலங்காவின் விமானப்படை விமானங்கள் இரவு 11.00 மணி முதல் 1.30 வரை கிளிநொச்சியின் மேலாகப் பறந்து புலிகளின் விமானத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது புலிகளின் விமானம் கொழும்பை நோக்கிச் சென்று களனி திஸ்ஸ மின்நிலையத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. தள்ளாடியில் புலிகளின் விமானம் குண்டு வீசியதைத் தொடர்ந்து இரவு 11.00 மணி முதல் சிறீலங்கா விமானப்படையினரின் விமானங்கள் வன்னியின் மேலாகப் பறந்து தொடர்ச்சியாகப் புலிகளின் விமானங்களைத் தேடிக்கொண்டிருந்தன.



குறிப்பாக கிளிநொச்சி, இரணைமடு, விஸ்வமடு, முரசுமோட்டை பிரதேசங்களில் பரா வெளிச்சத்தைப் பாய்ச்சி அது தனது தேடுதலை மேற்கொண்டது. ஆனால் பொதுமக்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி புலிகளின் விமானங்கள் மன்னாரூடாக வன்னியை நோக்கிச் சென்றுவிட்டன என்று தெரியவந்தது. எவ்வாறோ புலிகள் ஆதரவு தமிழ் இணையத்தளமான புதினம்.கொம் புலிகளின் உத்தியோகபூர்வ செய்தியைப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: மன்னார் பிராந்தியத்திலுள்ள தள்ளாடி இராணுவத்தளம் மீது செவ்வாய் இரவு 10.20 மணியளவில் புலிகளின் விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது. இராணுவத்தளம் பாரியளவில் சேதத்திற்குள்ளானது. இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

செவ்வாய் இரவு 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள களனிதிஸ்ஸ மின்நிலையத்தின் மீது வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தியுள்ளது. இவ்விரு தாக்குதல்களையும் நடத்திவிட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாகத் தமது தளம் திரும்பியுள்ளன. ஒன்றிற்கு மேற்பட்ட புலிகளின் விமானங்கள் இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு புலிகளின் ஆதரவுத் தளங்கள் முயற்சி செய்தன. இத்தாக்குதலில் புலிகளின் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் அறிக்கையிட்டுள்ளார்.

இராணுவ வட்டாரங்களும் கொழும்பு மின்நிலையத்தின் மீதான தாக்குதலில் ஒரு விமானமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. புலிகளின் ஆதரவுத் தளங்கள் மன்னார் இராணுவத் தளத்தின் மீது குண்டு வீசிய விமானமோ விமானங்களோ கொழும்பை நோக்கிப் பறந்து வந்து மின்நிலையத்தின் மீது குண்டு வீசியதாகத் தெரிவித்தன. கொழும்பிலிருந்து வடக்கே 250 கி.மீற்றர் தொலைவில் தள்ளாடி இராணுவத்தளம் உள்ளது. குறைந்தது இரு குண்டுகளைக் காவிச் செல்லும் விமானம் அல்லது விமானங்கள் வன்னியிலிருந்து புறப்பட்டு இராணுவத் தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு பின்னர் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டு அதன் பின்னர் பாதுகாப்பாகத் தமது தளத்திற்குத் திரும்பிச் செல்வதற்குப் போதுமான எரிபொருளை வைத்திருந்தனவா?



இராணுவத்திற்குக் கடுமையான இழப்புக்களும் சேதங்களும் ஏற்பட்டிருப்பதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் உரிமை கோருகின்றன. ஆனால், இராணுவ வட்டாரங்களின் தகவலின்படி உயிரிழப்புக்கள் எதுவுமில்லையென்றும் தளபாடங்களுக்குச் சிறிதளவு சேதமே ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரேயொரு பாதுகாப்பு அதிகாரியே காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. குண்டுகள் வீழ்ந்த போது அதிர்ச்சியால் ஊழியர் ஒருவர் மரணமானதாக மின்நிலையம் தெரிவித்துள்ளது. நிர்வாகப் பகுதிக் கட்டிடங்கள் மற்றும் குளிரூட்டிகள் தீப்பற்றியதால் சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் தீயணைக்கும் படையினர் அதனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயந்திரங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் புலிகள் சார்பு வட்டாரங்கள் கூறியுள்ள போதும் இதுவரை கொழும்பில் மின்சாரத் துண்டிப்பு அதிகளவில் இடம்பெற்றதாகச் செய்திகள் வரவில்லை. தந்திரோபாயமாக வெற்றிகரமான முறையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்கா விமானப்படையின் விமானங்களின் இடைமறிப்புகள் இல்லாமல் இலக்குகள் மீது குண்டுகளை வீசிவிட்டு தளத்திற்கு விமானங்கள் திரும்பிப் போயுள்ளன. அத்துடன், விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறைமைத் தாக்குதல்களால் வீழ்த்தப்படாமல் தளத்திற்குத் திரும்பிச் சென்றுள்ளன.

ஆயினும் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தென்படாததால் அவர்களின் தந்திரோபாய முக்கியத்துவம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளிலுள்ள ஆதரவாளர்கள் மற்றும் புலிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல்கள் உளவியல் ரீதியான உணர்வுகளைத் தக்க வைப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும். இந்தத் தாக்குதல்களும் ஒரு பெண்புலி உறுப்பினர் உட்பட இரு கடற்புலிகளால் காங்கேசன்துறை துறைகத்தில் இரு வர்த்தகக் கப்பல்கள் மீது ஒக். 22இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் புலிகளின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பன சிறப்பாகச் செயற்படுவதைக் காட்டுகின்றன.

இலங்கை இராணுவத்தால் வன்னிப்பகுதியில் தற்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் மத்தியிலும் அவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாகச் செயற்படுவதை இது காட்டுகின்றது. 1950களில் கொரிய யுத்தத்தின் போது வடகொரியா பயன்படுத்திய யுத்த உபாயங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதாக கடந்த மார்ச்சில் விடுதலைப் புலிகள் வான்படையைப் பயன்படுத்த ஆரம்பித்த தருணத்திலிருந்து ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். எந்தவொரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கத்தையும் வென்றெடுக்காமல் தென்கொரிய, அமெரிக்க விமானப்படை விமானங்களுக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் நோக்கில் வட கொரியா சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி அச்சமயம் தாக்குதல்களை மேற்கொண்டது.

விடுதலைப்புலிகள் விமானங்களைப் பயன்படுத்தியது முதல் இரண்டு சந்தர்ப்பங்களிலேயே கணிசமான உயி?ழப்புக்களும் தளபாட சேதாரங்களும் ஏற்பட்டன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அநுராதபுர விமானப்படைப் பயிற்சித் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலும், இவ்வருடம் செப்டம்பர் 9இல் வவுனியா இராணுவத்தளம் மீதான தாக்குதலின் போதும் கணிசமான உயி?ழப்புக்கள் உடைமையிழப்புக்கள் என்பன ஏற்பட்டன. இவ்விரு தாக்குதல்களும் ஆகாயமார்க்கமாக புலிகளின் விமானப்படையினரும் தரைமார்க்கமாக தற்கொலைப் போராளிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களாகும். தரை மார்க்கமாக மோதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை உறுப்பினர்களே பெருமளவு உயிர், உடைமை அழிவுகளை ஏற்படுத்தினர்.

விமானத்தின் பங்களிப்பு இங்கு உளவியல் ரீதியாக அத்தியாவசியமானதாக இருந்தது. தரையிலுள்ள சிறீலங்கா பாதுகாப்புப் படையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இது அத்தியாவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் வான்மார்க்க, தரைமார்க்க உறுப்பினர்களிடையே சிறப்பான ஒத்துழைப்பின் தரத்தைக் காட்டுவனவாக உள்ளன. புலிகளின் விமானங்கள் தனியாகச் செயற்படும் போதெல்லாம் அதாவது தரைமார்க்கமாக உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாத வேளைகளில் வென்றெடுக்கப்பட்ட பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கனவாக இல்லை. தரைமார்க்க சக்திகளின் ஆதரவு இல்லாமல் பொருளாதார இலக்குகள் மீது தனியாக விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கணிசமான சேதத்தை ஏற்படுத்த முடியும்.

ஆனால், குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும். இதுவரை பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் இரு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த வருடம் கொழும்பில் பெற்றோல் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிலொன்றாகும். மற்றையது ஒக்.28இல் மேற்கொள்ளப்பட்ட அனல் மின் நிலையம் மீதானதாகும். இரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போதியளவு சக்தி வாய்ந்தவையல்ல. அத்துடன், உபகரணங்களுக்குப் பாரதூரமான சேதத்தை ஏற்படுத்தக் கூடியவையுமல்ல. அத்தோடு சரியான இலக்கைக் கொண்டதாகவும் அது இல்லை. இதன் விளைவாக பொருளாதார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலிருந்து இவ்விரு தாக்குதல்களும் தோல்வியடைந்துள்ளன.

இதேவேளை, அண்மைய தாக்குதல் முன்னைய தாக்குதல்களைப் போலவே சிறீலங்கா விமானப் படையினதும் விமான எதிர்ப்புப் பாதுகாப்பு நடவடிக்கையினதும் உரிய தருணப் பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளன. விமான எதிர்ப்புச் சுடுகலன்களால் விமானத்தைச் சுட்டுவீழ்த்தக் கூடியதாகவும் இருக்கவில்லை. தாக்குதல் நடத்திய விமானங்களைத் துரத்திச் சென்று கீழே இறங்குவதை தடுக்கவும் முடியவில்லை. விடுதலைப் புலிகளின் விமானங்கள் கீழே இறங்கிய இடத்தைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்ற வேளை சிறீலங்கா விமானப்படை விமானங்கள் வானில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், புலிகளின் விமானங்கள் தரையிறங்கும் போது அவை தரையிறங்கும் இடத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்துவதில் அவை தோல்வி கண்டுள்ளன. புலிகளின் விமானம் பாதுகாப்பாகத் தரையறங்கியதுடன் அவர்களின் வான்படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் துரிதமாக அவற்றின் பாகங்களைக் கழற்றிக் கொண்டு அதனை அவர்கள் இரகசியமாக வைக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.

தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் மீண்டெழுவோம்


ஒருபுறம் இந்துப் பெருங்கடல் ஏனைய முப்புறமும் சிங்களப் படைகள். சிங்கத் தின் குகைக்குள் சிக்கியிருப்பதுபோன்ற நிலையிலேயே நாமிருப்பது உண்மையே. வெளிப்பார்வைக்குத் தெரிவனவும் இன வாத ஆய்வாளர்களின் ஆய்வுகளும் கோடாரிக்காம்புகளான ஒரு சில தமிழர் களின் கூற்றுக்களும் புலிகளைப் பலமிழந்தவர்களாகவே காட்டி நிற்கின்றன.

ஆனால் புலிகளின் பலம் தொடர்பில் வேறெந்த அமைப்பையும் விடவும் சிறப்பாக ஆய்வு செய்யும் இந்தியப் புலனாய்வுத்துறையும் இந்திய அதிகாரபீடமும் புலிகள் பலத்துடன் இருப்பதாக வெளிப் படையாக ஏற்றுக்கொண்டுள்ளன.

கடந்த 2009.02.18 அன்று இந்தியப் பாராளு மன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களத்தின் காலில் விழவேண்டும் என்று தனது அரசின் நிலைப் பாட்டைக் கூறினார்.

அவரது கூற்று பலராலும் கண்டிக்கப்பட்டபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சிங்களத்தின் பிடரியில் விழுந்தது அடி. 2009.02.21 இரவு சிங்கள வான்படைத் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானது.



வான்படைத் தலைமையகத்தைத் தாக்கியழித்த கரும்புலி கேணல் ரூபன் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று சிங்களப் பொருண்மியத்தின் இரண்டா வது முதன்மை மையமான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் அழிவுகளை ஏற்படுத்தினார்.

லெப்.கேணல் சிரித் திரன் சிங்கள வான்படை செயற்பாட்டு மையமான கட்டுநாயக்கா படைத்தளத் தில் தாக்குதல் நடத்தியிருந்தார். வான் கரும்புலிகளின் தாக்குதல் வெற்றியென்பது மதிப்பீடுகளுக்கு அப் பாற்பட்டது.

ஒருபுறம் கடலும் மூன்று புற மும் சிங்களப் படைகளாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பில் புலிகளை முடக்கி விட்டதாக சிங்களம் கூறிக்கொண்டிருக்க, அதனை முழு உலகும் நம்பியது. எம்மவர் பலர்கூட ஊக்கமிழந்து தோற்றுவிட்டோ மோ என்று துயரப்படும் நிலையிலிருந்த போதுதான் வான் கரும்புலிகள் தமது சாதனையை செய்து காட்டினார்கள்.

வானூர்தி மேலெழுந்தவுடன் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதபலம் சிங்களப் படை களுக்கு இருந்தது. ஆனால் வானோடிகளின் துணிச்சல், திறமை காரணமாக அவர்கள் தமது இலக்கை அடையும்வரை பறந்தார்கள். ஆக வான் கரும்புலிகளின் இலக்கு முழுமையாக அடையப்பட்டது.



உண்மையான சேதவிபரங்களை அறிய முடியாதளவிற்கு மூடிமறைப்பதில் வெற்றிபெற்றது சிங்கள அரசு. ஆனாலும் சில அவதானிப்புக்கள் மூலம் சில மதிப் பீடுகளைச் செய்யமுடியும்.

கடந்தகால வான் தாக்குதல்கள் அனைத்தின்போதும் சிங்கள வான்படை விமானங்கள் பறந்து வந்து வன்னியில் ஓர் சுற்றுச்சுற்றி தாம் பலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார் கள். அவ்வாறான பறப்புக்கள்மூலமாக சிங்கள மக்களின் உளவுரணை உறுதி செய்துகொள்வார்கள்.

ஆனால் வான் கரும்புலிகளின் தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்குப் பறப்புக்களையே மேற் கொள்ளமுடியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது சிங்கள வான்படை. சிங்கள வான்படை மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டதன்மூலம் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரது வினைதிறன்மிக்க தாக்குதலின் வெற்றியின் பரிமாணம் வெள்ளிடை மலையானது.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையிழந்து போயிருந்த தமிழர்கள் வெற்றிக்களிப்பிலிருந்த சிங்கள எதிரிகளும் தமிழ் துரோகிகளும் இந்திய அதிகாரபீடமும் பன்னாட்டுச் சமூகமும் ஆச்சரியப்படுமள விற்கு தாக்குதலை நடத்தியதன்மூலம் ஒருபோதும் வீழமாட்டோம் என்ற செய்தி இடித்துரைக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக இலக்குத் தெரிவும் புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியது. அண்மைக்கால தற்கொடை வான்தாக்குதல் அமெரிக்காவில் நடந்தது. அத்தாக்கு தலில் பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அத்தாக்குதல்மூலம் பின்லாடன் உலகப் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார்.

ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் விடுதலைப் போராளிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் தமது தற்கொடைத் தாக்குதலில்கூட எதிர்த்தரப்பு பொதுமகன் ஒருவர்கூட பாதிப்படையக்கூடாது என்ற இலட்சிய உறுதிப்பாட்டைக் கண்டு வியந்துநிற்கிறது பன்னாட்டுச் சமூகம்.

தாக்குதல் உத்தரவை வழங்கும் தலைவர் தொடர்பான மதிப்பீட்டையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருக்கிறது. கொடூரமான போரைத் தொடுத்து அப்பாவிகளைப் பலியெடுத்துவரும் சிங்களத்தரப்பு தமது இனப்படுகொலையின் உச்சத்தில் நிற்கிறது.

பச்சிளம் பாலகர் முதல் முதியோர்வரை அகவை வேறு பாடின்றி தமிழர்களைக் கொன்றொழித்து வருகிறது சிங்களம். அப்படியான சூழ் நிலையில் சிங்களத்தின் கோட்டையில் நடத்தும் தாக்குதல் ஒன்றின்போது பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட எவருமே புலிகள் மீது குற்றம்சாட்டியிருக்கமுடியாது.

அப்படியான களச்சூழல் இருந்தும்கூட சிங் களப் பொதுமகன் எவரையும் பாதிக்காத வகையில் தாக்குதலை நடத்தியதன்மூலம் இலக்கைத் தீர்மானித்ததன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் உலக அளவில் உயர்வாகப் பார்க்கப்படுகின்றனர்.

அத்தாக்குதலில் வீர காவியமான கருவேங்கைகள் நினைத்திருந் தால் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத் திருக்கலாம். பலநூறு கோடி பெறுமதியான சொத்தழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் உயர் மரபு.

ஒழுக்கம். உலகமே உற்று நோக்க வைத்த உறுதி.மூன்று நாட்களில் புலிகளின் பலம் தொடர்பான மதிப்பீட்டை மாற்றம் செய்யவேண்டியநிலை ஏற்பட்டது இந்தியாவிற்கு. ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அடைக்கலம் அடைய வேண்டுமென்று புலிகளுக்குப் போதித்த பிரணாப் முகர்ஜி, புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்குமளவுக்கு நிலைமாறி யது.

இந்திய நிலைப்பாட்டை மாற்றினார் கள் கேணல் ரூபனும், லெப்.கேணல் சிரித் திரனும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போதும் வீழமாட்டார்கள். உறுதியுடன் மீண் டெழுவார்கள் என்ற செய்தியைக்கூறி தனது இன்னுயிரை இருப்போர் வாழ்விற்காக ஈகம் செய்த உயர்ந்தமனிதர்கள்.களத்தில் எமைக்காக்கும் எமதருமைப் போராளிகள் போற்றுதலுக்குரியவர்கள்.

பல நாடுகளின் இராணுவ உதவிகள் போர்த் தளபாட நன்கொடைகள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்களுடன் வெறிகொண்டு வரு கிறது சிங்களப்படை. பத்து நாட்களுக் கொரு வெடிபொருள் கப்பல் பாகிஸ்தானி லிருந்து வருவதாகக் கூறுகிறது சிங்களம். அப்படி வரும் பெருமளவு ஆயுதபலத்துடன் தமிழின அழிப்பில் ஈடுபடுகிறது சிங்களப் படை.

ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் எதிரடி கொடுத்துவருகின்றனர் களத்தில் நிற்கும் போராளிகள். அவர்களது காப்பில் நாம் வாழ்ந்துவருகிறோம். போதியளவு உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி எமைக்காக்கும் போராளிகளுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?

உலகப்போர் நியதிகளை மீறி வேதியல் குண்டுகளையும், கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி மனிதாபிமானமற்ற போரைத் தொடர்கிறது சிங்களம்.2009.02.14 ஆம் நாள் மத்திய, வடமேல் மாகாண தேர்தல் நாள். அன்றைய நாளுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து அனைத்து வன்னிமக்களையும் வதைமுகாமிற்குக் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்தார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

கிரிசாந்தி குமாரசாமி படுகொலை விசாரணை, செம்மணி புதைகுழி விசாரணை போன்ற எந்தவொரு விசாரணைகளும் நடை பெறமாட்டாது என்றும் இராணுவத்தினர் விரும்பிய எதனையும் தமிழர்கள் தொடர்பில் மேற்கொள்ளலாம் என்றும் படையினருக்கு ஊக்கம் கொடுத்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச. வவுனியாவிலுள்ள வதைமுகாம்களிலுள்ள தமிழர்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோன்று சுகம் அனுபவிப்பதாகவும் தானே முன்னின்று அந்த மக்களை மூன்று ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்கப்போவதாகவும் ஐ.நா. அதிகாரியிடமே கூறியிருந்தார் அரச தலை வரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச.

மூன்று ராஜபக்சாக்களும் கண்ட கனவுகள் பலிக்கவில்லை.14ஆம் நாளுக்குள் புலிகளை வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்சவால் முடியவில்லை. தோற்கடித்தார்கள் போராளிகள். வன்னியிலுள்ள தமிழ்ப் பெண்கள் எல்லோரையும் கிருசாந்தியாகவும் கோணேஸ்வரியாகவும் நடத்தமுடியாமல் போனது கோத்தபாய ராஜபக்சவுக்கு. தடுத்துக்காத்தார்கள் களப் போராளிகள்.

வன்னி மக்கள் அனைவரை யும் வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லமுடிய வில்லை பசில் ராஜபக்சவால். காத்தனர் புலிகள். இங்கிருக்கும் தமிழர்கள் அனை வருமே சிங்களத்தின் எறிகணை வீச்செல் லையில் இருந்தபோதிலும் உயிரிழப்புக்களைக் குறைப்பதில் வெற்றிகண்டுள்ளனர் கரும்புலிகள். இப்போது எம்மைப் பாதுகாப்பது புலிகளின் வீரமும் விவேகமுமே என்பதனை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும்.

மதித்து நடக்க வேண்டும். இப்போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர் நடக்கிறது. விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்கள் தொடர்பாக எதனையும் சொல்லா விட்டால்கூட, அவ்வப்போது நீண்ட தூரத்திற்கு ஏவப்படும் எறிகணைகளும் சிங்கள ஏடுகளும், இந்திய ஊடகங்களும் கொழும்பில் சவச்சாலைகளும், மருத்துவ மனைகளும் பல செய்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றன.

அச்செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் புலிகளை அழிப்பதோ வீழ்த்துவதோ சிங்களத்தின் பகற் கனவே என்றுதான் கூறவேண்டியுள்ளது. ஏனைய ஊடகங்களின் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தால்கூட இன்றும் புலிகளே பலமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

பெப்ரவரி 14 அன்று மட்டும் உருக்குலையாத நிலையில் இருந்த 400 இராணுவ உடலங்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டன. பெப்ரவரி 14 புதுக்குடியிருப்பு மேற்கில் 200 படையினர் கொல்லப்பட்டனர் என்று தென்னிலங்கை ஊடகம் கூறியது, பெப்ரவரி 25 விசுவமடுப் பகுதியில் கடும் சண்டை நடைபெறுவ தாக அரச ஊடகம் கூறியது.

28 ஆம் நாளுக்கு முந்திய வாரத்தில் புலிகளின் சிறப்பு கமாண் டோ அணிகள் பல பெரும் தாக்குதல்களை நடத்தியதாக லக்பிம பத்திரிகை கூறியது. மார்ச் 2 சாலைப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடத்தியதாக தென்னிலங்கை ஊடகம் கூறியது. கிபிர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்திய ஊடகமும் கண்ணால் கண்ட மக்களும் கூறினர்.

மார்ச் 3 அன்று வெற்றிலைக்கேணி, வண்ணாங் கேணிப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடந்ததாக தென்னிலங்கைச் செய்திகள் கூறியன. மற்றும் நாம் நாளாந்தம் கேட்கும் போரொலிகள் வெல்லாவெளி, கதிர்காமம் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் பலம்மிக்கவர்கள். மிக வலிமை மிக்கவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கின்றன.

ஆக நாம் வீழமாட்டோம் என்பது உறுதி. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தவர்கள் கூறும் விடயமொன்று உள்ளது. அதாவது எந்தவொரு நாட்டிலும் நடந்திராத பல்திறன் மிக்க சொந்தக் காலில் நின்று போராடும் அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது.

பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஆரிய திராவிடப் போர் 1958 இல் சிங்கள வெறி யாட்டத்தின்மூலம் புதுப்பிக்கப்பட்டது. எமது தேசியத் தலைவருக்கு நான்கு வயதாக இருந்தபோது நடந்த இனப்படுகொலையில் இங்கினியாக்கல கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த 150 தமிழர்கள் சிங்களவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

சிறு குழந்தைகள் சிங்களக் காடையர்களால் கொதிக்கும் தார் கொள்கலனில் அமிழ்த்திக் கொல் லப்பட்டனர். அன்றுதொட்டு 1983 வரை தமிழி னம் குட்டுவாங்கியபடியே இருந்தது. பல்லா யிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற மமதை சிங்களத்திற்கு. மெல்ல மெல்ல வளர்ந்த புலிகள் திருப்பித் தாக்கும் வல்ல மைபெற்றபோது தமிழருக்கு என்று ஓர் மதிப் பும் மரியாதையும் கிட்டியது.

சிறு கைத்துப்பாக்கியுடன் தொடக்கப் பட்ட தமிழரின் வாழ்வுப் போரானது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை யில் விவாதிக்கப்படுமளவுக்கு முனைப்புப் பெற்றுவிட்டது. இனி எவராலும் இந்த விடு தலைப்போரை முடக்கமுடியாது. இது எமக் கான காலம். அறுபடைக்காலம்.

ஆம். நாம் சந்தித்த துன்ப, துயரங்கள், சாவுகள், சதிகள், துரோகங்கள், அவலங் கள் அனைத்தையும் தாண்டி வந்துள்ளது எமது போராட்டம். எழுத்தில் வடிக்கமுடியாத ஈகங்கள், உயிர்கொடைகள்மூலம் வளர்க் கப்பட்ட செடி அறுவடையை நெருங்கிநிற்கும் காலம் இது. தற்போது நாங்கள் சிறுபகுதிக் குள் முடக்கப்பட்டிருப்பது உண்மையே. இருப் பினும் இதிலிருந்து மீண்டெழும் வல்லமையை எமது தலைவரும் அவருக்குத் தோள்கொடுக்கும் போராளிகளும் கொண்டுள்ளனர்.

இது உண்மையானது.இந்தப் போராட்டம் வெல்லும். தியாகி லெப்.கேணல் திலீபனும், கப்டன் மில்லரும், 2ஆம் லெப்.மாலதியும், கேணல்.ரூபனும் தோற்கடிக்கடிக்கப்பட முடியாதவர்கள். அவர்களது எண்ணம் ஈடேறும். இது உறுதி.

நாம் உறுதியுடன் மீண்டெழுவோம். அந்த எழுச்சி ஓர் நாட்டை உருவாக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவடைக்குத் தயாராவோம். போராளிகளுக்குத் தோள்கொடுப்போம். துணைநிற்போம். வெல்லும்வரை செல்வோம். உறுதிதளராது ஊக்கம் கொடுப்போம். உறுதியுடன் மீண்டெழுவோம்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு இராணுவப் படைகளை அமைக்கலாம்: பாதுகாப்புச் செயலாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்களைக் கொண்டு இரண்டு பெரிய இராணுவப் படைகளை அமைக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் புலிகளிடம் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்ட யூகங்களைவிடவும் பெருந்தொகையான ஆயுதங்கள் இதுவரையில்
மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இணையத்தள ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்திருந்த போது விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாதெனக் கூறும் தரப்பினரும், முடியும் எனக் கூறும் தரப்பினரும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்த மக்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் பாரியளவு ஆயுதங்களை தருவித்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்படுகிறார்: சிறிதுங்க ஜயசூரிய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஆட்சி நடத்தி வருவதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இலங்கையில் தலையீடு செய்வதனை அடியோடு வெறுத்த ஜனாதிபதி தற்போது இரு கரம் கூப்பி குறித்த அமைப்புக்களை கடன் வழங்குமாறு அழைப்பது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரியாமல் மேற்கொள்ளப்படும் இந்த கொடுக்கல் வாங்கல்களின் ரகசிய நிபந்தனைகள் என்ன என்பதை நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவசர அவசரமாக மின்சார சபை திருத்தச் சட்டமூலம் இந்த நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்த வெற்றிகளை தவிர இந்த அரசாங்கத்தினால் பற்றிபிடிக்க வேறு விடயங்கள் இல்லை. ஆயிரத்து 800 கோடி ரூபாவை செலவிட்டு, 500 பேருக்கும் மேல் இல்லை என கூறும் விடுதலைப்புலிகளுடன் மோதலில் ஈடுபட 50 ஆயிரம் படையினரை ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு பெறும் வெற்றி ஒருபோதும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த காரணமாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வொன்று நாட்டுக்கு அவசியம் என்பதனை கருத்திற் கொண்டு அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரிக்கை


இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களின் நடமாட்டத்தை விடுதலைப் புலிகள் தடுப்பது கண்டனத்திற்குரியது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் தரக்குறைவாகவும் இடவசதிகள் அற்றும் காணப்படுவது கவலைக்குரியது.

இரு தரப்பும் அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடத்தல் வேண்டும். போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பதுடன் உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

போர் நடைபெறும் பகுதிகளுக்கும் மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் அனைத்துலக மற்றும் தேசிய மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு தடைகள் அற்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.

பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஏனைய நாடுகளுடனும் உதவி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப்பட்டது: நேற்று மட்டும் 100 படையினர் பலி;450 பேர் காயம்


புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் 1000 ற்கு மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் 100 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், 450 வரையான படையினர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்னியில் இன்று புயலுடன் கூடிய மழையினால் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் பல புயலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மழைக்குள் மக்கள் இருக்க வேண்டிய அவலம் எழுந்துள்ளது.


இதேவேளை பொது மக்களை இலக்கு வைத்து இன்றும் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தினால் 100நாடுகள் வலியுறுத்தும்: வைகோ


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.

சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரத மேடைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த உண்டியலில் 5லட்சம் நிதி செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியபோது,’’அலைபாயும் கடலுக்கு அப்பால் கண்ணீர் சிந்தும் ஈழமக்களுக்கு ஆதரவு அளிக்காத மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரதம் இருந்து வரும் என் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு நிமிடமும் கொத்துயிரும் குலையுயிருமாக ஆகிக்கொண்டிருக்கும் நம் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

ஈழத்தமிழரின் இருட்டிலே ஒரு வெளிச்சம் வருகிறது. எங்களுக்கு நம்பிக்கை வருகிறது’’ என்று தெரிவித்தார்.

‘’ இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால் உலகில் 100நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்.

ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத போது மற்ற நாடுகள் எப்படி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.

‘’வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது அவரிடம் இலங்கை அரசு பணம் கொடுத்தால் ஆயுத உதவி அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணம் கொடுத்தாலும் ஆயுதம் கொடுக்க மாட்டேன் என்றார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஆனால் இந்த காங்கிரஸ் அரசு ஆயுத உதவி அளிக்கிறது. 5 ரடார்கள் கொடுத்திருக்கிறது.

போரை நிறுத்துங்கள் என்று உலக நாடுகள் எல்லாம் சொல்கிறது.

இந்திய அரசு ஏன் சொல்லவில்லை. இந்திய அரசுதானே ஈழத்தமிழர்கள் மீது போரை நடத்துகிறது. பின்பு எப்படி போரை நிறுத்தச்சொல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.
’’ஈழத்தமிழர் பிரச்சனைக்கு யார் காரணம்? இந்திய அரசுதான் காரணம். இந்தியாவில் ஆட்சி நடத்தும் கட்சி காரணம். அக்கட்சியிலே கூட்டணி வைத்திருப்போர் காரணம்.

ஈழத்தமிழர் படுக்கொலைக்கான கூட்டுச்சதியில் கருணாநிதிக்குதான் முதலிடம்’’ என்று தெரிவித்தார்.

வைகோ வின் வன்னி பயணம்

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:

தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.

ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் -

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் -

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் -

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார், ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் -

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.

தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் -

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் -

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவே வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பாரத்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.