அவர் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரை நேற்று இரவு 11மணிக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து தெரிந்துகொண்டார்.
மருத்துவர்களிடம் சீனிவாசனின் நிலைமையை அறிந்துகொண்ட அவர், வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம், ‘’இது மாதிரி தொடர்சம்பவங்கள் நடக்கக்கூடாது. திரும்ப திரும்ப வலியுறுத்திவருகிறோம்..அப்படியிருந்தும் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.
ஈழத்தமிழர் துயர் தாங்காமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.
மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.. இதுமாதிரி சம்பவங்களில் ஈடுபடவேண்டாம்’’ என்று தெரிவித்துக்கொண்டார்.


ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கனவரின் தியாகத்திற்கு பணம் வேண்டாம்:வைகோவிடம் சீனிவாசன் மனைவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சீனிவாசன் (வயது 36). தேமுதிகவின் தீவிர தொண்டர்.
இவர் நேற்று இரவு 10 மணிக்கு தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீர் என்று, இலங்கை தமிழர்களுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுவதும் வெந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக, அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குறித்த வாலிபர் சீனிவாசன், காதல் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 11மணிக்கு மருத்துவமனை வந்து சீனிவாசனின் உடல் நலம் குறித்து பார்த்தும் விசாரித்தும் தெரிந்துகொண்டார்.
அப்போது அவர், அம்முவிடம் சீனிவாசனின் மருத்துவசெலவுக்காக 10ஆயிரம் கொடுத்தார். ஆனால் அம்முவோ, என் கனவர் ஈழத்தமிழருக்காக தீக்குளித்துள்ளார். அந்த தியாகத்திற்கு பணம் கொடுக்காதீர்கள் என்று மறுத்தார்.
வைகோ பிடிவாதமாக, இது மருத்துவசெலவுக்காகத்தான். இதை வாங்கிக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறி பணத்தை கொடுத்தார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.