இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்

கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வெளியிட்டுள்ளது.










இதில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து தமிழரின் தேசியக்கொடியினை போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவப் படைவீரர் ஒருவர் தமது அமைப்பிற்கு தகவல் வழங்கியதாகவும், ஆதாரமாக 200 புகைப்படங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட போரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சிவிலியன்கள் செறிந்திருந்த பகுதியில் எறிகணை வீச்சு நடத்தப்பட்டதாகவும் இலங்கைப்படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் கடந்த வருடம் இடம்பெற்ற போர் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் , ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிக்கிறதல்லவா? அமெரிக்காவின் குவண்டேனமா சிறையை போல இங்கே பொதுமக்களும் போராளிகளும் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆதாரபூர்வமாக தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாகிறது.

இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், கொடுங்கொல் நாடாகிய இலங்கையை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டியுள்ளனர்.

இவர் வன்னியை சேர்ந்தவர், புலிகளின் அரசியல் அமைப்பில் உறுப்பினராக பணியாற்றியவர். இவர் போராளி அல்ல, அரசியல் பணி ஆற்றி வந்தவர். இது நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவல். சொன்னவர்களுக்கு இவர் இறந்தது தற்பொழுது தான் தெரியுமாம்.