உத்தேச அதிகாரப் பகிர்வு விவரம் குறித்து வெளிப்படையாகத் தெளிவுபடுத்துங்கள்!

"இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசமைப் பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்ட அதிகாரப் பரவ லாக்கலை வழங்குதல்", "13 ஆவது திருத்தத்துக்கு அப் பாலும் சென்று அதிகாரப் பரவலாக்கலைச் செய்வது" என் பன போன்ற பல கதைகள் இப்போது அடிபடுகின்றன.இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலை இலங்கை அரசுவழங்குவதில்தான் இலங்கை இந்திய உறவின் போக்குத் தங்கியுள்ளது என்ற சாரப்பட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வெளிப் படையாகவும், அப்பட்டமாகவும், திடமாகவும் கூறி யுள்ள பின்னணியிலேயே இந்த அதிகாரப் பகிர்வுக் கதையெல்லாம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்படுகின் றன என்பது கவனிக்கத்தக்கது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் சுமார் 22 ஆண்டு களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் நுழைந்த இந்தியத் துருப் புகள், 1990 முற்பகுதியில் வெளியேறியமையை அடுத்து கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரசமைப்புத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு, தமி ழர்களைப் பொறுத்தவரை குப்பைக்கூடைக்குள் போய்விட்டது என்பது திண்ணம்.அதனை மீளத் தூசுதட்டி எடுத்து, தமிழ்ச் சமூகத்துக் குப் புதுப்பித்துப் பரிமாறுவது குறித்து இப்போது பேசப் படுகின்றது.


ஏற்கனவே நாறிப்போன குப்பைக் கூடைக் குள்போன இந்த ஏற்பாடு, இலங்கைத் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை எதிர்பார்ப்புகளை அவாவை விருப்பத்தை நிறைவு செய்யுமா என்பது வேறு விடயம்.ஆனால், அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள அனைத்தையுமாவது அல்லது அதையும் தாண்டி அதிகமானவற்றை தமிழர்களுக்கு விட்டுக்கொடுக்கத் தென்னிலங்கைச் சமூகம் தயாரா என்பதுதான் இப்போ தைய பிரதான கேள்வியாகும்.

விடுதலைப் புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாகக் கொழும்பு மார்தட்டும் இந்தச் சூழலில், இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைச் சமாளித்துக் காலத்தை இழுத்தடிப்பதற்காக இப்போதைக்கு 13 ஆவது திருத்தம் குறித்து வாயளவில் பேசுவது வேறு.உண் மையில் தமிழர்களுக்கு நியாயம் செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டும் என்ற நீதியைப் புரிந்துகொண்டு அதனடிப்படையில் விடயங்களை அணு குவது வேறு.

இதில் கொழும்பு அதிகாரவர்க்கம் எந்த நிலைப்பாட்டில் உண்மையில் உள்ளது என்பதை இனித் தான் போகப் போகத்தான் நாம் புரிந்துகொள்ள முடியும்.ஆனால், இவ்விடயத்தில் தென்னிலங்கை அதிகார வர்க்கத்தின் கடந்தகால செயற்பாடுகளும், நடவடிக் கைகளும் நம்பிக்கையளித்து ஏமாற்றுவனவாகவே அமைந்தன என்பதும் இங்கு மறுக்கப்பட முடியாததாகும்.


யாழ்., வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவ காரங்களுக்காக அந்தப் பிரதேசங்களுக்கு விஜயம்செய் யும் அரசுத் தலைவர்கள், தமிழர்களுக்கு நியாயமான அதி காரப் பரவலாக்கலை வழங்க அரசுதயார் என்று தங்களது பரப்புரைகளிடையே தவறாது உறுதி வழங்கி வருகின்றனர்.அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர் வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என்றும், அது தொடர்பாக ஜனாதிபதியுடன் தங்களுக்கு ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் அரசுத் தரப்புக் கூட்டணியின் சின்னத்தில் போட்டி யிடத் தாங்கள் முன்வந்தனர் என்றும் ஈ.பி.டி.பியின் செய லாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார்.நல்லது.

இத்தகைய இணக்கப்பாடு ஒன்றை நேரத் துடன் வலியுறுத்தி, அதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதி பதியான அரசுத் தலைவரை சம்மதிக்கவைக்க எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவைதான்.ஆனால், இந்த இணக்கப்பாடு எல்லாம் வெறுமனே "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம்", "13 ஆவது திருத் தத்துக்கு அப்பாலும் செல்வது" என வெறும் வாய் வார்த்தை ஜாலங்களாக இருப்பது போதுமானதல்ல.இந்த விவகாரத்தில் தெளிவான சில பிரச்சினைகள் உள்ளன.

* தமிழர் தாயகத்தின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் வடக்கு கிழக்கு இணைப்பு.

* தமிழர் பிரதேசத்துக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவாறு பொலிஸ், காணி அதிகாரங் கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.

*இவற்றுக்கும் அப்பால் சென்று வழங்கப்படக் கூடிய பகிரப்படக்கூடிய எஞ்சிய அதிகாரங்கள்.


இந்த மூன்று விடயங்கள் குறித்தும் வெளிப்படை யாகவும் மக்களுக்குப் புரியத்தக்க விதத்திலும் கருத் துகளும், நிலைப்பாடுகளும் முன்வைக்கப்பட வேண் டும்; தெளிவுபடுத்தப்பட வேண்டும்.இந்த விடயங்களை வெளிவெளியாகப் பேசி, அவை குறித்துத் தமது நிலைப்பாட்டை அம்பலப்படுத்தாமல் மூடி மறைத்துக் கொண்டு,

பூடகமாக "அதிகாரப் பகிர்வு" என்ற சொற் பிரயோகத்துக்குப் பின்னால், வார்த்தை ஜாலம் பண்ணிக்கொண்டிருப்பது விரும்பத்தக்கது அல்ல; தமிழர்களிடம் நம்பிக்கையை வளர்க்கக் கூடியது அல்ல.ஆகையால் இவ்விடயத்தில் தெளிவாகவும், விவரமாக வும், வெளிப்படையாகவும் கருத்துக்களை முன்வைப் பதற்கு அரசுத் தரப்பினர் முதலில் முன்வரவேண்டும்.அப்போதுதான் மக்களும் தமது பதிலைத் தெளிவான முறையில் பிரதிபலிக்க வாய்ப்பு ஏற்படும்.அரசியல் தலைவர்கள் இதைச் செய்யத் தயாரா?

நன்றி :

நிலவில் மனிதன் காலடி வைத்து நிறைவு பெற்ற 40 வருடங்கள்

அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல்ஆம்ஸ்ரோங்கும் எட்வின் ஆல்ட்ரினும் சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து நேற்றுடன் சரியாக 40 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. 1961 மே 25 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி அந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் தனது நாடு சந்திரனில் மனிதனை இறக்கி பாதுகாப்பாக மீண்டும் பூமியில் தரையிறக்கும் என்று அறிவித்தபோது உலகம் அதை நம்பமறுத்தது. வானத்திலேறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா என்று கவிஞர்கள் ஏக்கத்துடன் பாடியகாலம் அது. நிலவைப் பார்த்து கதை பேசிக் கொண்டிருந்த உலக மக்கள் வியக்கும் வண்ணம் 1969 ஜூலை 20 இல் அமெரிக்க விண்கலம் அப்பலோ 11 சந்திரனில் இறங்கியது.



ஆம்ஸ்ரோங், ஆல்ட்ரின் மற்றும் அவர்களுடன் கூடச் சென்ற இன்னொரு விண்வெளி வீரரான மைக்கேல் கொவின்ஸை முழு உலகமுமே பெருமையுடன் பாராட்டியது, சந்திரனில் தன்னால் பதிக்கப்பட்டது தனிமனிதனுக்கு ஒரு காலடியாக இருக்கலாம். ஆனால் மனித குலத்துக்கு அதுஒரு மகத்தான பாய்ச்சல் என்று நிலவில் இறங்கிய முதல் மனிதன் ஆம்ஸ்ரோங் வர்ணித்திருந்தார்.

அப்பலோ 11 க்குப் பிறகு 1972 ஆம் ஆண்டுவரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா' மேலும் 12 விண்வெளி வீரர்களை சந்திரமண்டலத்தில் உலவிடச் செய்தது. 1959 க்கு பின்னரான அரை நூற்றாண்டு காலத்தில் அமெரிக்கா, சோவியத்யூனியன் (ரஷ்யா), ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சந்திரனை நோக்கி 17 பயணங்களை மேற்கொண்டிருந்தன. ஆனால், சந்திரனில் இதுவரை தங்கள் தடங்களைப் பதித்த விண்வெளி வீரர்கள் சகலருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சோவியத்யூனியன் ஆளில்லாத விண்கலங்களையே சந்திரனில் இறக்கிச் சாதனை படைத்தது. கென்னடி நிருவாகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்திரனை நோக்கிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் அமரவைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், விஞ்ஞானத்துறையின் வளர்ச்சியில் சாதனைக்குரிய மைல்கல் என்று வர்ணிக்கப்படும் சந்திரமண்டலத்தில் பதிந்திருக்கும் மனிதக்காலடி கெடுபிடியுத்த காலகட்டத்தில் சோவியத்யூனியனுடனான அமெரிக்காவின் போட்டாபோட்டியின் விளைவானதே என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆரம்பத்தில் அப்பலோ 11 திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் நாசா இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், அப்பலோ 11 விண்கலம் 1969 ஜூலை 16 ஆம் திகதி மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனுக்கான பயணத்தைத் தொடங்கியது. சந்திரனை அடைந்த அப்பலோவின் கொமாண்ட் மொடியூல் எனப்படும் விண்கலத்தின் ஒருபகுதியில் கொலின்ஸ் தங்கியிருந்து சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்க, ஆம்ஸ்ரோங் முதலில் காலடி வைத்தார். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் சந்திரனில் இறங்கினார். சந்திரனுக்கான நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பிய அப்பலோ11 மனித குலத்தை வியப்பில் ஆழ்த்தியது. இரு விண்வெளி வீரர்களும் இரண்டரை மணிநேரம் சந்திரமண்டலத்தில் தங்கியிருந்து மாதிரி மண்ணை எடுத்தனர். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளை "நாசா' நேரடியாக ஒளிபரப்புச் செய்த போதிலும் அதிகப்பெரும்பான்மையான உலகமக்கள் வானொலி வர்ணனைகள் மூலமே அவற்றைக் கேட்கக் கூடியதாக இருந்தது. 40 வருடங்களுக்கு முன்னர் வானொலிகளின் மூலமாக கேட்ட வர்ணனைகள் இன்றும் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

சுமார் 240,000 மைல் தொலைவில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக்கோள் சந்திரன் ஒன்றுதான். 20 ஆம் நூற்றாண்டில் பல தடவைகள் சந்திரனை வெற்றிகரமாகச் சுற்றிய நாசா புதிய நூற்றாண்டில் சந்திரனுக்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு சந்திரனுக்குப் போவதற்கு நாசா திட்டமிடுவதன் நோக்கம் 2020ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் காலடி பதிப்பதற்கு மேற்கொள்ள வேண்டியிருக்கும் பயணத்தின் போது ஓய்வெடுப்பதற்கு தங்கு நிலையம் ஒன்றை சந்திரனில் அமைப்பதேயாகும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விண்வெளி வீரர்கள் ஓய்வெடுக்க தற்போது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையமும் (INTERNATIONAL SPACE CENTRE) தயாராகப் போகிறது.

ஆல்ட்ரினும் கொலின்ஸும் சந்திரனில் மனிதன் காலடி பதித்த 40 ஆவது வருடாந்த நிறைவைக் கொண்டாடுவதற்கு வாஷிங்டனில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போது விண்வெளி ஆராய்ச்சி இனிமேல் சந்திரனை குறிவைப்பதற்குப் பதிலாக செவ்வாயை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அங்கு உரையாற்றிய ஆம்ஸ்ரோங், சந்திரனை நோக்கிய பயணமே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான கடைசி முடிவான சமாதானப் போட்டி என்று வர்ணித்திருக்கிறார். வரலாற்றுச் சாதனை படைத்த விண்வெளி வீரர்கள் சிலர் பிற்காலத்தில் இயல்பு திரிந்த விசித்திரமான குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். நீல்ஆம்ஸ்ரோங் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஆம்ஸ்ரோங் முஸ்லிமாக மாறினார். அதற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது நள்ளிரவில் ஒரு வித்தியாசமான ஓசையைக் கேட்டதாகவும் அது சந்திரனில் தான் இறங்கிய போது கேட்கக் கூடியதாக இருந்த ஓசையை ஒத்ததாக இருந்ததாகவும் பதிலளித்திருந்தார். மனித குலம் பெருமைப்படும் வகையில் நிலாக்கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த இந்த விண்வெளி வீரர் இவ்வாறாகவும் ஒரு கதையைச் சொன்னார் என்பதை இன்றைய சந்ததியினர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

நன்றி : தினக்குரல் நாளேடு

தலைவர் வீரச்சாவு விடயத்தில் உண்மை உறங்கக்கூடாது


'நமது உணர்வுகளின் தேவை மட்டுமல்ல
அரசியல் தேவையும் கூட"
- செல்லத்துரை சத்தியநாதன் -


தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?. இந்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது.

இந்த சூழலில் கட்டுரையின் ஊடாக சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் எனத் தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதன் நோக்கம் இந்த சர்ச்சை தொடரக்கூடாது என்பதனை வலியுறுத்துவது தான்.

தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதன் அவசியத்தினை வலியுறுத்துவது தான். இந்த வணக்கம் தமிழீழ மற்றும் உலகத் தமிழ் மக்களின் உணர்வுகளின் தேவை மட்டுமல்ல, அவர்களின் அரசியல் தேவையும் கூட.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான துறையும் புலனாய்வுத்துறையும் வெளிப்படுத்தி அவருக்கான வீரவணக்கத்தினையும் செலுத்தி விட்டனர்.

இருந்தபோதும் விடுதலைப் பணியாளர்கள் பலர் தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் புலம்பெயர் தமிழ் மக்களும் உலகத் தமிழ் மக்களும் தேசியத் தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமையை இதுவரை இழந்துள்ளனர்.

முன்னாள் சட்டவாளரும் தமிழீழம் பெருமையடையக்கூடிய அறிஞருமான திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் தனது http://www. tamilnation.org வலைப்பினனலில் தலைவர் அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

18.06.2009 அன்று எழுதப்பட்ட இந்த வணக்கக்குறிப்பில் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து கிருஸ்ணா அம்பலவாணர் எழுதிய கீழ்க்காணும் கருத்துக்களில் தான் உடன்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். (பார்க்க - http://www.tamilnation.org/saty/090618vp.htm)

'...மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துக்கள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த சாவு ஈழத் தமிழினத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக - ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும். ஆனால், இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்." (31.05.20099)

கிருஸ்ணாவின் இந்த கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்.

தெளிவாகச் சிந்திக்கக்கூடிய எவரும் தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாக நம்புவதற்கு எவ்வித அடிப்படைகளும் இல்லை. நாம் ஏற்க மறுக்கும் செய்தியினை நமது மனம் இலகுவில் ஏற்று விடுவதில்லை. தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற செய்தியும் அத்தகையது தான்.

தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பு ஒரு சிறுதுளி கூட இருக்காதா என உலகத் தமிழர் மனங்கள் ஏங்குவதும் இயல்பானது தான். நமது வாழ்க்கையில் அறிவு ஏற்கும் ஒரு விடயத்தை மனம் ஏற்க மறுப்பதும் பல தடவைகளில் நடந்து விடுவது தான்.

இந்த சந்தர்ப்பங்களில் அறிவுக்கும் மனதுக்கும் பெரும் போராட்டமே நடக்கும். ஆரம்பத்தில் மனம் வெற்றி பெற்றாலும் இறுதியில் அறிவுதான் வெற்றி பெறும். இது நம் வாழ்க்கை அனுபவம்.

இதுதான் தலைவர் அவர்களின் விடயத்திலும் நடந்து வருகிறது. அறிவு அவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை உணர்த்தினாலும் மனம் அதனை ஏற்க மறுக்கிறது.

இருந்த போதும் மனத்தினை அறிவு வென்று தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்த செய்தியினை மக்கள் மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.

எவ்வளவு விரைவில் மனதினை அறிவு வெல்கிறது என்பது அவரவர் சிந்தனைத்திறனின் கூர்மையினைப் பொறுத்தது.

தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாக தற்போதும் நம்பும் மக்கள் நாளாந்தம் தமது அறிவுக்கும் மனதுக்குமிடையே போராடி வருகிறார்கள்.

தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு வணக்கம் செலுத்த மறுப்பதலாலேயே இவர்களது மனப்போராட்டம் தொடர்கிறது. குழப்பம் நீடிக்கிறது.

ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனும் காரணமும் தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் கூறப்படுகிறது. இது அவலமான ஒரு முரண்பாடு.

தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்தமை தெரிந்திருந்தும் அதனை மறுப்பதும் மறைப்பதும் ஒரு அடிப்படை நேர்மையீனம்.

இந்த நேர்மையீனம் சுயநலத்தின் அடிப்படையிலிருந்து எழுகிறது என வாதிட நான் முன்வரவில்லை. மாறாக, எந்தப் பொதுநோக்கு காரணமாவும் நாம் நேர்மையீனத்தை நியாயப்படுத்திவிட முடியாது.

பொறுப்பானவர்கள் மக்களுக்கு உண்மையைக்கூற வேண்டும். தலைவர் விடயத்தில் அறிவுக்கும் மனதுக்குமிடையில் நாளாந்தம் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது. இவ்வாறு விளையாடுவது மக்களுக்கு இழைக்கும் மிகப் பெரிய அநீதி.

தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்குமாயின் தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.

வெளிநாடுகளில் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டால் போராட்டச் செயற்பாட்டுக்கான கட்டமைப்பு உடைந்து சிதைவுற்று விடும் என்ற காரணம் கூறப்படுகிறது.

அந்தக் கட்டமைப்பு சிதைவுற்றுவிடின் போராட்டத்திற்காகச் செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்பட்டு விடும் என்று பயம் எழுந்துள்ளது.

தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறார் எனக் கூறுவதன் மூலம் போராட்டத்திற்கான கட்டமைப்பை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது போல் தெரிகிறது.

இந்தக் கணிப்பீடு மிகப் பெரும் தவறு.

உண்மையில் தலைவர் அவர்களின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்டு அவருக்கு எழுச்சியுடன் வீரவணக்கம் செலுத்தி, அந்தக் கூட்டெழுச்சியின் உந்துதலோடு கடமைகளைத் தொடர்வதே போராட்டத்திற்கான பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்கு வழி சமைக்கும்.

மாறாக, உண்மையினை மறுப்பதும் மறைப்பதும் போராட்டச் செயற்பாடுகளின் சிதைவுக்கே நாளடைவில் வழிகோலும். மக்களின் மனதினை அறிவு வெல்லும் போது மக்கள் முன் பொய்யர்களாக நிற்க வேண்டி வரும்.

மக்களின் கோபக் கனலுக்கு முன்பாக பொசுங்கிப் போக வேண்டி வரும்.

போராட்டத்திற்கான எந்தப் பணியையுமே செய்ய முடியாத நிலை தோன்றும்.

மக்கள் முன்னால் குற்றவாளிகளாகத் தலை குனிந்து நிற்க வேண்டி வரும். அல்லது ஓடி ஒளிக்க வேண்டி வரும்.

இதனால், உரியவர்கள் தமது சிந்தனையைக் கூர்மைப்படுத்தி மிகத் தெளிவான முடிவை எடுப்பது அவசியம்.

தமிழகத்தில் தேசியத் தலைவர் அவர்கள் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாக விளங்குகிறார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகிறார்.

தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்தமையினை ஏற்றுக்கொண்டால் தமிழ்த் தேசிய எழுச்சி வீழ்ச்சி அடைந்து விடும் என தமிழக தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

இவ்வாறு ஒப்புக்கொள்வது தமிழ்த் தேசியத்தின் தோல்வியாகி விடுமோ எனப் பயமுறுகின்றனர். இதனால் இவர்களும் தலைவர் அவர்களின் வீரச்சாவினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இந்த நிலைப்பாடும் மாபெரும் அரசியல் தவறு.

மிக நீண்ட காலமாக தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக நின்று வரும் தமிழகத்தின் தமிழீழ ஆதரவுத் தலைவர்கள், தலைவர் வீரச்சாவு விடயத்தில் தமிழக மக்கள் முன் பொய்யர்களாகக் கூனிக்குறுகும் நிலை காலத்தால் ஏற்பட்டு விடும் என நான் அஞ்சுகிறேன்.

இத்தகைய நிலை ஏற்படின் இந்த தலைவர்களால் தமிழீழ மக்களுக்கு எவ்வாறு உறுதுணையாக இருக்க முடியும்?

எவ்வாறு இவர்களால் தமிழ்த் தேசிய எழுச்சியினை தலைமையேற்று முன்னெடுக்க முடியும்?

தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வாய்ப்பினை உரிய நேரத்தில் இழந்தமை குறித்த கோபக்குரல்களும் இவர்களைச் சுட்டெரிக்கும்.

இதற்கு மாறாக, தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு உலக வரலாறு காணாத எழுச்சிமிகு வீரவணக்கத்தினைச் செலுத்திவிட்டு அந்த எழுச்சியுடன் தலைவர் அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகக் கொணடு தமது கடமைளைச் செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

இங்கு மேலும் இரு வாதங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையில் சிக்காது நமது பணிகளை நாம் முன்னெடுத்துச் செல்லவேணடும்.

இந்த சர்ச்சையில் சிக்கினால் தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைந்துவிடும்.

இந்த வாதத்தினை முன்வைப்பவர்ளின் எண்ணம் நல்நோக்கத்தினை கொண்டது.

ஆனால், அவர்களின் அணுகுமுறை அரசியல் ரீதியில் தவறானது. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை முடிவுக்கு வராமல் நாம் நமது அடுத்த கட்டப் போராட்டத்தினைப் பற்றி நாம் தெளிவாகச் சிந்திக்க முடியாது.

இத்தகைய தெளிவின்றி எந்தப் பணிகளையும் தொலைநோக்குடன் முன்னெடுக்க முடியாது.

மேலும் தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை தீர்க்கப்படாவிடின் அதுவே தமிழ் மக்களின் ஒற்றுமையினைக் குலைத்துவிடும்.

இந்த சர்ச்சையினைப் புறந்தள்ளிவிட்டுப் பணியினை மேற்கொள்ள முனையும் போது - புரையோடிப்போகும் புற்றுநோயைப் போல இந்த சர்ச்சையே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை அழித்துவிடும்.

அடுத்த வாதம், தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதினை ஏற்றுக்கொண்டு - அவருக்கு வீரவணக்கம் செலுத்தவேணடியது எவ்வாறு எனக் கேள்வி எழும்புகிறது.

தலைவர் அவர்களுக்கு செலுத்தும் வணக்கம் என்பது அவருக்கு மலர் தூவுவதோ அல்லது சுடர்வணக்கம் செலுத்துவதோ அல்ல, மாறாக தமிழீழத்தினை எடுத்து அவரது காலடியில் சமர்ப்பிப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான வணக்கம் என அது வாதிடுகிறது.

நாம் எவ்வாறு தமிழீழத்தினை எடுக்கப் போகிறோம்?

ஆயுதப்போராட்டம் முலமாகவா? அல்லது மிக நுணுக்கமாத் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வுகளுடாகத் தமிழ்த் தேசிய எழுச்சியினை உயிர்ப்புடன் பேணி – தமிழர்களின் நியாயபூர்மான உரிமைப் போராட்டத்திற்கு அனைத்துலக ஆதரவினை வென்று எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாக்கி அதனுடாகத் தமிழீழத்தின் சாத்தியத்தினைப் பற்றி சிந்திக்கப் போகிறோமா?

இந்த விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை.

ஆனால், தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு உரிய வணக்கத்தினைச் செலுத்தி அந்த வணக்க பீடத்தில் நின்று நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதியெடுத்துக் கொள்வதே - தலைவர் அவர்களின் இலட்சியக்கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும்.

மாறாக, தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாய் பொய் கூறிக்கொண்டு, அந்தப் பொய்யின் அத்திவாரத்தில் நின்று நாம் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்திப்போமானால் - அந்த அத்திவாரமே ஆட்டம் கண்டு தலைவர் அவர்களது இலட்சியக் கனவினைத் தகர்ந்து விழச் செய்து விடும்.

இன்னுமோர் விடயம். இது தலைவரின் பாசறையில் வளர்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் முன்பாகவுள்ள தார்மீகக் கடமை சாந்த விடயம். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கூறி, தற்போதைய எமது நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைவர் அவர்களைப் பொறுப்பாக்குவது தார்மீகத்திற்கு எதிரானது. சத்தியத்திற்கும் புறம்பானது.

தலைவர் பாசறையில் வளர்ந்த எந்தப்போராளியும் இத்தகைய அணுகுமுறைக்குத் துணை போகக்கூடாது. மாறாக இதனைத் தடுத்து நிறுத்தவே செயற்படவேண்டும்.

நாம் அiஎவரும் தெளிவாகச் சிந்தித்துச் சரியான முடிவினை எடுக்க வேண்டிய தருணம் இது.

வெளிநாடுகளில் போராட்டப் பணிகள் தடைப்பட்டுவிடும் என்று பயந்தோ – தமிழகத்தின் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு குந்தகம் விளைந்து விடும் எண்ணியோ தயவுகூர்ந்து தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்தும் மக்களுக்குப் பொய் கூறிக்கொண்டிருப்பதனை நிறுத்துங்கள்.

தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை முக்கியம் அல்ல. தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படுவதே முக்கியம் என்று எண்ணி இந்த சர்ச்சையினைப் புறந்தள்ளி - இந்தப் புறந்தள்ளுகை ஊடாக தமிழர்களின் ஒற்றுமை சிதைவடையவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் பலவீனமடைந்து போகவும் துணை போய் விடாதீர்கள்.

தலைவர் அவர்களுக்கு காணிக்கையாகத் தமிழீழத்தைப் பெறுவதே உண்மையான வீரவணக்கம் என்று கூறி - தலைவர் அவர்களின் விடுதலைக் கனவை சிதைத்து விடாதீர்கள்.

உண்மையின் பலம் மிகவீச்சானது. பொய்மைகனை அது விரைவாகச் சுட்டெரித்து விடும். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதான பொய்மையினை அவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற உண்மை சுட்டெரிக்கும் போது பொசுங்கப் போவது பொய்மை மட்டுமன்றி – தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வீச்சும் தான் என்பதனை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேணடும்.

இனியும் தலைவர் வீரச்சாவு விடயத்தில் உண்மை உறங்கக்கூடாது. உரியவர்களை உண்மை பேசவைப்பது உலகத் தமிழ் மக்களின் கடமை.

கானல் நீராகும் 13 ஆவது திருத்தம்



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசுவெற்றியீட்டியதான அறிவிப்பு வெளி யான கையோடே தென்னிலங்கையில் பேரினவாத சக்தி கள் கிளர்ந்தெழுந்து ஆடும் என்பது எதிர்பார்க்கப்பட்டது ஒன்றே.

அதை இப்போது நடைமுறையில் காணும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இதுவரை, அரசுடன் இணைந்து நின்ற இந்தச் சக்தி கள், இப்போது அரசுக்கு எசச்ரிக்கை விடுத்து, சவால் உரைக்கும் அளவுக்கு எகிறுகின்ற கள நிலைமை ஏற் பட்டிருக்கின்றது.
தமிழர் பிரதேசங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்த ளிக்கும் எத்தனத்தில் அரசுஇறங்குமானால் அரசிலிருந்து வெளியேறி, அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம் என அரசுப் பங்காளிக்கட்சியான ஹெல உறுமய அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் சாயலில் அறிவிப்புச் செய்துள்ளது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, தமிழருக்கு இருப்பிடம், உணவு, உடை, சுய கௌரவம் தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றும் தானே வரையறை செய்து அறிவித்திருக்கின்றமை வேடிக்கையானது.

நலன்புரி மையங்கள் அல்லது அகதி முகாம்கள் என்ற பெயரில் குறித்தொதுக்கப்படும் இடங்களில் வாழ்ந்து கொண்டு, அங்கு அரசும், ஏனைய உதவி நிறுவனங்க ளும் போடும் உணவு மற்றும் உடை போன்ற உதவிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு வாழ்வதுதான் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வு என இத்தரப்பினர் எண் ணிக்கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை தமது தாயக மண்ணில், தமது நலன்களைத் தாமே பேணும் வகையில், தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொண்டு, இந்தத் தேசத்தில் மற்றெல்லாப் பிரஜைகளுக்கும் உரிய உரிமைகளையும் வசதிகளையும் தாமும் சமமாகப் பகிர்ந்து அனுபவித் துக்கொண்டு, எந்தவித இன ஒதுக்கல் மற்றும் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு உட்படாமல் சுய திருப்தியுடன் வாழ்வதையே தமது கௌரவமான வாழ்க்கை முறையாகக் கருதுகின்றார்கள்.

அத்தகைய கௌரவ வாழ்க்கை முறையை சிறு பான்மையினரான தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுப் பதற்கான முதல் அடியே அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்று பல தரப்பினராலும் கூறப்பட்டு வந்தது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வான இடைக்கால ஏற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்ற யோசனையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியிடம் கையளித்தபோது, "இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதல் அடி" என்று குறிப்பிட்டே அதனை வரவேற்றது இந்தியா. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நீண்ட தூர பயணத்தில் இது ஒரு முதல் காலடி என்றுதான் இந்தியா அச்சமயம் இதனை விமர்சித்தது.
அது மாத்திரமல்ல, அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டையே அரசுத் தரப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அவ்வப்போது பரப்புரைகள் மூலம் வெளிப்படுத்தி வந்தது.

ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிடும் என்ற நிலைமை. பதின்மூன்றாவது திருத்தத்தையே நிராகரித்து போர்க்கொடி தூக்கியிருக்கின்றது அரசுக்குள் வலுவான சக்தியாகச் செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமய.

அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் அரசமைப்புக்குச் செய்யப்பட்ட பதின்மூன்றாவது திருத்தமே போதுமான தல்ல தமக்குத் திருப்தி தரக்கூடியதல்ல தமது நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய தல்ல என்று தெரிவித்து நிற்கின்றார்கள் தமிழர்கள். தற்போதைய ஒற்றையாட்சிக் கட்டமைப்பு அரசுக்குள் பதின்மூன்றாவது திருத்தம் மூலம் வழங்கப்படும் அதி காரப் பரவலாக்கல் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தக்கதல்ல என்பதைத் தமிழர்கள் தரப்பு தொடர்ந்து பிரதிபலித்தே வந்துள்ளது.
எனினும் நம்பகத்தன்மையையும், நல்லெண்ண சுமுக நிலையையும் கட்டி வளர்ப்பதற்கான முதல் முயற் சியாக ஆரம்பக்கட்ட எத்தனமாக அதனை ஏற்றுச் செயற்படுங்கள் என்பதே தென்னிலங்கையுடன் சமர சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் நிரந்தர அமைதியை எட்டவைக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தலைவர்கள் மற்றும் தரப்புகளின் வாதமாக இருந்து வருகின்றது.

ஆனால் அந்த முயற்சிகளுக்கும் அடியோடு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது போலும் ஹெல உறுமய.
நாட்டுக்குள் பிரிவினை கோருவது அரசமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றால்
அரசமைப்பில் தெளிவாக உள்ள 13 ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று தடுப் பதும் கூட அரசமைப்பு விரோதச் செயற்பாடாகவே அர்த் தப்படுத்தத் தக்கது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய தாகும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலு நொறுக்கப்பட்டு விட்டது என்ற சூழலில் இப்போது பதின்மூன்றாவது திருத்தம் கூட கானல் நீராகி வரும் சூழ்நிலை. சுருங்கச் சொல்வதானால் அதிக உரிமைகள் கேட்ட தமிழர்கள் இன்று "பிச்சை வேண்டாம்; நாயைப்பிடி!" என்ற திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.