புலிகளின் அறிவிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலிகளின் அறிவிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம்தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


வரலாறு
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

தமிழீழம்
மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறுகின்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப் படுகிறார்கள்.



கொடியேற்றுதல்

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத்தேசியக் கொடி தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன் அவர்களாலும், மாவீரர் குடும்ப உறுப்பினர்களாலும் தமிழீழத்தில் உள்ள அந்தந்தத் துயிலும் இல்லங்களில் ஏற்றப்படும். புலம்பெயர் நாடுகளில் மாவீரர் குடும்ப உறுப்பினார்களால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் ஏற்றப்படும்.

கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரை அவர்களால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உரை



மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்படுகிறது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்படுகிறது.


மாவீரர் நாள் பாடல்

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்த பாடல் புதுவை இரத்தினதுரை அவர்களால் இயற்றப்பட்டது. வர்ணராமேஸ்வரன் அவர்கள் பாடியது. ஈகச்சடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.[1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்கிறது:



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


மாவீரர் குடும்ப கௌரவிப்பு
மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழீழத்தில்
ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப் படுவார்கள்.










புலம்பெயர் நாடுகள்
அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப் படுவார்கள்.







கார்த்திகைப் பூ
கார்த்திகைப் பூதேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டு கலாச்சாரத்தின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.



இந்த வகையிலேயே தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

ஆண்டுவாரியான எண்ணிக்கை

விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு:

ஆண்டு மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 அக்டோபர் வரை
2008
2009

படை நடவடிக்கைகளின்படி மாவீரர்களின் எண்ணிக்கை
படைநடவடிக்கைகளின்படி வீரச்சாவடைந்த மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

நடவடிக்கை மாவீரர் எண்ணிக்கை
ஆகாயக் கடல் வெளிச் சமர் 604
மணலாறு 233
தவளை நடவடிக்கை 460
கொக்குத்தொடுவாய் 175
இடிமுழக்கம் 181
சூரியகதிர் (ரிவிரச) 438
ஓயாத அலைகள் ஒன்று 315
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 100
சத்ஜெய 2 நடவடிக்கையும் அதன் மீதான எதிர்த்தாக்குதல்களும் 133
பரந்தன் ஆனையிறவு 193
வவுணைதீவு 103
கிளிநொச்சி, பரந்தன் மீதான ஊடுருவித் தாக்குதல் 300
ஓயாத அலைகள் இரண்டு 403
ஜெயசிக்குறு படைநடவடிக்கையும் அதன்மீதான எதிர்த்தாக்குதலும் 2146
ஓயாத அலைகள் மூன்று 1336
ஓயாத அலைகள் நான்கு 181
தீச்சுவாலை முறியடிப்புச் சமர் 141

நன்றி : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா

சரணடைவதற்கான பேச்சுக்கே இடமில்லை: போராட்டம் தொடரும் - தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்

நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளதாக அனைத்துலக ஊடகமா அனைத்துலக ஊடகமான 'அசோசியட் பிறஸ்' வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை. மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என நடேசன் கூறியுள்ளார்.

போரை நிறுத்தும் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் புறந்தள்ளி வருகின்றது. அனைத்துலக சமூகம் இந்தக் கொடுமையான போரை நிறுத்த முனவரவேண்டும். இக்கொடிய போரில் மக்களின் உயிர்களைக் காக்க அக்கறை இருந்தால் எந்த நாடென்றாலும் தனது இராஜதந்திர வரப்புகளைக் கடந்து இப்போரை நிறுத்த முன்வரவேண்டும் என அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைமை உட்பட நாம் அனைவரும் எமது தாயத்தில் இருந்தவாறே போராட்டத்தை நடத்தி வருகின்றோம். சிறீலங்காப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தயா மாஸ்ரர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் அல்ல எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி மக்கள் பேரவலம்; களமுனை; இந்தியா; அனைத்துலக சமூகம்; தமிழக மக்கள்; புலம் வாழ் தமிழர்: பா.நடேசன் விரிவான விளக்கம்


தற்போதைய அரசியல், இராணுவ நிலவரம், வன்னி வாழ் தமிழர் படும் அவலங்கள், உலகம் எங்கும் நிகழும் தமிழர் போராட்டங்கள், அனைத்துலக சமூகம் இயங்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் இயங்கும் இந்தியா என பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அளித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த வாரம் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு பா.நடேசன் வழங்கிய சிறப்பு நேர்காணல்:

தாங்கொணா துன்பங்களுக்கு ஊடாக தாயக மக்கள் அவலங்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தற்போது மிகவும் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் ஒரு பெருந்தொகையான மக்கள் அவலப்படுகின்றனர். அவர்கள் நாளாந்தம் சந்திக்கும் அவலம் என்ன என்பதை உங்களிடமிருந்து நான் முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்?

தற்போதைய சூழலில் எங்களுடைய மக்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு சிறிய பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் இடம்பெயர்ந்து, நிலங்களில் பதுங்கு குழிகள் அமைத்து முக்கியமாக சிறிலங்கா அரச படைகளுடைய கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு புறம் முகம் கொடுத்த படியும் இன்னொரு புறம் பொருளாதார தடை, உணவுத் தடை, மருந்துத் தடை என பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்தபடி ஒரு மனித அவலத்தின் உச்சத்தில் எங்களுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இரவும் பகலும் சிறிலங்கா இராணுவத்தினுடைய ஆட்லெறி எறிகணை வீச்சுக்கள் கண்மூடித்தனமான முறையில் மக்கள் செறிவாக வாழ்கின்ற குடியிருப்புகள் மீதுதான் இலக்கு வைக்கப்படுகிறது. சராசரி ஒரு நாளைக்கு சிறிலங்கா இராணுவத்தினருடைய ஆட்லெறி அதாவது பீரங்கித் தாக்குதல்கள் மூலம் 50 இல் இருந்து 100 வரையிலான மக்கள் கொல்லப்பட்டும் 200 வரையான மக்கள் காயப்பட்டும் வருகின்றனர்.

இந்த புள்ளி விபரத்தை இங்குள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நடுநிலையான அமைப்புகள் உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமயம் ஆட்லெறி எறிகணை வீச்சுகள் ஒரு புறம், இன்னொரு புறம் வான்குண்டு வீச்சுகள் கூட மக்கள் குடியிருப்புகள் மீது இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது.

அதுமட்டுமல்ல இன்றைக்கும் காயப்படுகின்ற மக்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சைகள் கொடுப்பதற்கு கூட மருந்துகள் இல்லை. இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை மருந்து தடையை உருவாக்கி மக்களை பெரியதொரு இன அழிப்பு நிலைக்கு தள்ளி இருக்கின்றது.

அதுமட்டுமல்ல உணவு ரீதியாகவும், இன்றைக்கு எங்களுடைய மக்கள் மரக்கறி உணவுகளைச் சாப்பிட்டு மாதக் கணக்காகிறது. உதாரணத்திற்கு நாங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதாவது வல்லிபுனம், தேவிபுரம் போன்ற பிரதேசத்தில் இருந்துவிட்டு இங்கே வந்த பின்னர் மக்கள் தற்போது சாப்பிடுகின்ற உணவு வெறும் சோறும் பருப்பும் அல்லது சோயா மீற் என்று சொல்லப்படுகின்ற உணவு மட்டுமே.

இலை - குழை அல்லது கீரை வகைகள் என எந்தவொரு சத்து உணவைக் கூட மக்கள் உண்ண முடியாத ஒரு நிலையில் இந்த 21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச மனித அவலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

எங்களுடைய மக்கள் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்திற்கு, பெரும் சவால்களுக்கு, நெருக்கடிகளுக்கு மத்தியில் முகம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த குறுகிய பிரதேசத்திற்குள் இத்தனை லட்சக்கணக்கான மக்கள், ஏற்கனவே இடம்பெயர்ந்து இப்போது இந்த பிரதேசத்திற்குள் இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை, இத்தனை அவலங்களுக்கு மத்தியிலும் நடத்தக்கூடியதாக இருக்கின்றது?
உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இப்போது தொழில் வாய்ப்புக்கள் இல்லை. வருமானங்கள் இல்லை. அதாவது சேமித்து வைத்த சேமிப்புகள் எல்லாம் செலவழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் எங்களுடைய அமைப்புக்கள் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்களும் அதே போன்று நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்குப் போதுமான வரை உதவி செய்கின்றார்கள்.

அதே போன்று எங்களுடைய மக்களுடைய பண்பாட்டு வாழ்க்கை முறை, இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்கின்ற ஒரு பண்பாடு இருந்து வருகின்றது. இந்த வகையில் இருப்பவர்கள் தங்களுடைய சேமிப்புகளில் இருந்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்கள், தமிழீழ நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்கு உணவுக் கஞ்சி அதாவது, அரிசியில் கஞ்சி காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு தடவை வழங்கி வருகின்றனர்.

எங்களுடைய மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு, அதாவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெரும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய காலங்களில் உலக உணவுத் திட்டத்தால் அனுப்பப்டுகின்ற உணவுகள் மாத்திரம் கப்பல் மூலம் எடுத்து வரப்படுகின்றன. அதிலும் எங்களுடைய மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய முறையில் உணவுகள் இங்கே வருவதில்லை.

கடந்த காலத்தில் இரண்டு முறை உணவு வந்திருக்கிறது. ஆனால் அரிசி வரவில்லை. அண்மையில் இறுதியாக வந்தக் கப்பலில்தான் அரிசி வந்திருக்கின்றது. அது கூட எங்களுடைய மக்களின் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவிற்கு வரவில்லை. பெரியதொரு மனித அவலம் இங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கேட்டால் தெரியும். அதுபோல இங்கே இடம்பெறுகின்ற மனித அவலம் இன்றைக்கு முழு உலகத்திற்கும் நன்றாக தெரிய வந்திருக்கின்றது.

தற்போது நீங்கள் இருக்கின்ற குறுகிய பிரதேசத்திற்குள் மக்கள் தங்குவதற்கான போதுமான கூடாரங்கள் இருக்கின்றனவா?
எங்களுடைய மக்களுக்கு இங்கே போதுமான கூடாரங்கள் இல்லை. இருந்தாலும் கடந்த காலங்களில் யுஎன்எச்சிஆர், ஐசிஆர்சி போன்ற அமைப்புக்கள் வழங்கிய கூடாரங்களை வைத்துக்கொண்டு மக்கள் தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.

அதேபோன்று தற்போது வாழ்கின்ற பிரதேசத்தில் பனைகள் நிறைய இருக்கின்றன. பனை ஓலைகளையும் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்போது மிகவும் வறட்சியான காலம்; மிகவும் வெப்பமான காலம். அவ்வாறான சூழலில் கூடாரங்களுக்குள் வாழ்கின்ற மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக, வெப்பத்தினால் ஏற்படுகின்ற கொப்பளிப்பான் போன்ற வருத்தங்கள் தற்போது எல்லா இடமும் பரவத் தொடங்கியுள்ளன. அதேபோன்று வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை கூட தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. இப்படியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றனர்.

தமிழீழ சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் சேவையாளர்களுக்கு "வருமுன் காப்போம் என்ற கோட்பாடு" இருக்கிறது. உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற நோய்கள், வருத்தங்கள், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் போதிய அளவு எங்களிடம் இல்லை.

ஆகையினால், இந்த வருத்தங்கள், தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு கருத்துரைகள், கருத்துக்களை மக்கள் மத்தியில் போய் அவர்கள் நாளாந்தம் வீடு வீடாகச் சென்று, மக்களுடைய ஒவ்வொரு குடியிருப்பாக அவர்களுக்கு சுகாதாரம் தொடர்பான கல்வி ஊட்டல்களை தீவிரமாக தமிழீழ சுகாதார சேவையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஏராளமான போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல காயப்பட்ட போராளிகள், தமது உறுப்புகளை இழந்த போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு அந்த போராளிகளோடு சுகாதார தொண்டர்களும் என எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக மக்கள் வாழிவிடங்களுக்குச் சென்று நோய்களை எவ்வாறு தடுப்பது, எவ்வாறு சுகாதாரத்தைப் பேணுவது, எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுப்பது என்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இது பெரிய அளவில் எங்களுக்குப் பயன் அளிக்கின்றது. தொற்று நோய்களில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றுச் கொள்கிறார்கள்.

அங்கு மக்கள் பாதுகாப்பு வலயம் உருவாக்கி இருக்கின்றோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. அதில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் நிலவரம் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், யுனிசெஃப், யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் சுதந்திரபுரத்தில் இருந்தபோது அந்த இடத்தை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தி மறுநாளே அந்த இடத்திற்குச் சென்று ஐசிஆர்சி, யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் வேலை செய்த இடங்களுக்கு ஆட்லறி எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு அங்குள்ள பணியாளர்களைக் காயப்படுத்தியதுதான் கடந்த கால வரலாறு.

அவ்வாறுதான் தற்போதும் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்திய, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுகள் இரவும் - பகலும் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் கூடாரங்களில் படுத்து, நடு இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற போது திடீரென்று நான்கு புறத்தில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றதன. அப்போது குடியிருப்புக்களில் இருந்து எழும் மரண ஓலங்களைக் கேட்டால் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற மனித அவலத்தின் உச்சத்தை அங்கே கேட்கின்ற குரல்களின் ஊடாக கேட்கக்கூடியதாய் இருக்கும்.

இந்த மக்களுடைய ஓலங்கள், நாளாந்தம் நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எந்த அளவில் அந்த மக்களிடையே உளரீதியான பாதிப்பினை குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது?
உண்மையில் மக்கள் நாளாந்தம் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், நீண்டகால போராட்ட வாழ்வில் எம் மக்கள் இதுவரை அடைந்த இழப்புக்களை முன்வைத்து இசைவாக்கம் அடைந்திருக்கும் காரணத்தால் முதியோர் இளையோர் வேறுபாடின்றி இனி எந்த துயர் வந்தாலும் தனிநாடு அமைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எம்மோடு நிற்கின்றனர். நீங்கள் இங்கு வந்து கேட்டால் தெரியும். வயது போன அம்மாவைப் பார்த்துக்கேட்டால் கூட சொல்லுவார்கள்; இவ்வளவு தூரம் நாம் இழந்து விட்டோம் இனி எதனை இழந்தாவது ஒரே அடியாக அடித்து எதிரியை வெளியேற்றி நாட்டை மீட்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு மக்களுடைய மனநிலை தற்போது இருக்கின்றது.

அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் ஒரு எதிர்வினையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறீர்களா?

மக்களுடைய மனங்களில் எவராலும் மாற்ற முடியாத வைராக்கிய உணர்வொன்று தோன்றியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தற்போது இடம்பெறுகின்ற சண்டைகள் கூட அதை பிரதிபலிக்கின்றன. புதிதாக இணைந்துள்ள போராளிகள் கூட மிக ஓர்மத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலத்தில் சில அமைச்சர்கள் "The Matter Few Days" என்று கூறியிருந்தனர். ஆனால் நேற்றைய நாள் கோத்தபாய ராஜபக்ச இந்த போரை முடிக்கும் கால எல்லையை கூற முடியாது என்று கூறியிருந்தார்.

ஏன் என்றால் எங்களின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கின்றது, இராணுவம் பாரிய இழப்புகளையும் அழிவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. இராணுவத்திற்கு சில நெருக்கடிகள் வந்து விட்டது என இராணுவத்திடம் இருந்தே சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மும்முனைகளில் அனைத்து முனைகளிலும் இறுக்கமான ஒரு நிலையை சிறிலங்கா படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். இன்னும் குறுகிய காலத்தில் முற்றாக அனைத்தையும் கைப்பற்றி விடுவோம் என்கின்றனர். உண்மையில் அங்குள்ள களநிலவரம் என்ன?

களநிலவரம் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. மும்முனைகளிலும் வரும் இராணுவம், எங்களின் சின்னப் பிரதேசத்தில் சூழ்ந்திருக்கின்ற இந்த இராணுவம் மட்டும்தான் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள சண்டையிடும் ஆற்றல் படைத்த படையணி ஆகும்.

இந்தப் படையணிகள் அண்மைய காலமாக பெரும் பெரும் இழப்புகளைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்படி, முன்னணியில் முன்னேறிக் கொண்டிருந்த படையணிகள் தம்மால் இனி முன்னேற முடியாது என உயர் கட்டளை அதிகாரிகளுடன் முரண்படும் அளவிற்கு எங்களுடைய தாக்குதல்களும் இராணுவத்தின் இழப்புகளும் அதிகமாகி உள்ளன.

அண்மைய இராணுவத்தின் அதிகாரபூர்வ தகவல்களின்படி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 3 நாட்கள் சமரில் 450-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 600-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயப்பட்டும் களமுனையில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,000 இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இதனுடைய பிரதிபலிப்பு மாங்குளம், கனகராயன்குளம் போன்ற இடங்களில் சாதாரண ஊர்க்காவற் படையினரே நிறுத்தியுள்ளனர்.

இராணுவத்தில் இருக்கின்ற சண்டையிடக்கூடிய படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சண்டையின் மூலம் முற்றாக அழியக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதுதான் உண்மையான கள யதார்த்தம். இந்த இடத்தில் நாங்கள் தீவிரமாக, ஓர்மமாக நின்று இச்சண்டையை வெல்வோமானால் எங்கள் போராட்டத்தின் அதியுச்ச விடுதலை விரைவாக கிடைக்கும். இதில் வருகின்ற இராணுவத்தை நாங்கள் வென்றோமானால் மீதியுள்ள பிரதேசத்தில் எங்களுடைய மக்கள் கால்நடையாக நடந்து சென்றே ஆயுதம் இல்லாமலேயே அங்குள்ள இராணுவத்தினரை பிடித்து அடித்து கலைக்கின்ற அளவிற்குத்தான் மற்ற இராணுவத்தினர் இருக்கின்றனர்.

தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்துள்ளனரா?

உண்மையில் நாங்கள்தான் மக்களுக்கு கவசங்களாக இருக்கின்றோம். இது சிறிலங்காவாலும் சிறிலங்காவிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடுகள் மற்றும் ஊடகங்களாலும் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரமாகும். உண்மையில் மக்களுக்கான கவசங்களாக நின்று, விடுதலையை விரைவாக வென்றெடுக்க வேண்டும் என்ற ஓர்மத்தினால் தொடர்ந்து போராடுகின்றோம்.

ஓர் இனம், அதன் மக்கள் தாம் ஆடியோடி மகிழ்வாக வாழ்ந்த மண்ணை விட்டு அவர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட வேண்டும் என்று வெளியில் இருப்பவர்கள் அது அனைத்துலக நாடாகவும் இருக்கலாம் சிறிலங்காவாகவும் இருக்கலாம் கூறி வருகின்றனர். அது சரியா?
உண்மையில் இது ஒரு அநீதியான செயலாகும். இது எங்களின் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாத, மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள்தான், இவ்வாறான செயற்பாடுகளையும், இவ்வாறான கூற்றுக்களையும் கூறி வருகின்றனர். இது ஒரு பிழையான கணிப்பீடாகும். பிழையான செயலாகும்.

சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களை பார்க்கும் பொழுது எந்த விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்கள் போரியல் குற்றத்தை இழைக்கின்றனர் என்று பார்க்கிறார்கள்?

சிறிலங்கா போரியல் குற்றங்கள் புரிகின்றது என்பதற்கு ஏராளமான சாட்சிகளும் ஆதாரங்கள் மற்றும் சான்றுகளும் நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்குப் பாதுகாப்பு வலயம் என்று மக்களை வரவழைத்து, லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்ற இடத்தின் மீது செறிவான பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், வான்குண்டு வீச்சு தாக்குதல்கள் என நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் போது, அதற்கு சான்றாக சாட்சியாக இங்கே ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.

அதேபோன்று உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை இராணுவம் போடும் போதும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதனை பார்த்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே போர்க்குற்றம் புரிந்துள்ள சிறிலங்கா அரசிற்கு எதிராக உலக நாடுகள் நீதியான ஒரு விசாரணையை மேற்கொள்ள வரும்போது அதற்கு நடுநிலையான சாட்சிகளும் சான்றுகளும் எங்களிடம் நிறையவே இருக்கின்றன.

அனைத்துலகத்தில் தற்போது ஒரு நல்ல மாற்றம் தென்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

முக்கிய காரணம், எங்களுடைய போராட்டம் தர்மத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டது. எங்கள் போராட்டம் மக்கள் போராட்டம். மக்கள் விடுதலைப் போராட்டம். மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக நீண்ட காலம் நடக்கும் போராட்டம் என்பதனால், உலகம் எங்களின் பக்கம் எங்களின் விடுதலையின் பக்கம் திருப்புவதங்கான அரசியல் சூழல் உருவாகி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் சில முன்னெடுப்புக்கள் நிகழ்த்தும் போது, சில நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பக்க பலமாக இருந்து அப்படியான செயற்பாடுகளை முடக்கும் வண்ணம் நடந்து கொள்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இப்படியான அனைத்துலக நாடுகளுக்கு என்ன கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றனர்?

ஐக்கிய நாடுகள் சபையில் எங்களுடைய பிரச்சினையை அங்கு கலந்துரையாடலுக்கு எடுப்பதற்காக அனைத்துலக நாடுகள் முன்வருவது இதுதான் முதல் தடவை. எங்களுக்கு எதிரான நாடுகள் வந்தாலும் கூட அமெரிக்கா போன்ற நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் உள்ளதாக அவதானிக்க முடிகின்றது.

ஏனென்றால், ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியே பாதுகாப்பு சபையில் விவாதிக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு இரண்டு பிரிவாக பிளவுபட்டு நிற்கின்றது. எங்களுடைய போராட்டத்தில் இது முதற்தடவை. ஐக்கிய நாடுகள் சபையில் எங்களின் பிரச்சினைகள் குறித்த ஒரு விவாதம் அங்கு உருவாகியிருப்பதே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வேன்.

அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் தமக்கான அரசியல் இராணுவ அல்லது பொருளாதார நன்மையை வைத்துதான் முடிவு எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது வன்னிப்பெரு நிலப்பரப்பு அல்லது எமது தாயக மண்ணைப் பொறுத்த மட்டில் அவர்கள் எப்படியான, எமக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பார்கள் என்று கூற முடியுமா?

எங்களுடைய மக்கள் முற்று முழுதாக தங்களுடைய அரசியல் போராட்டத்தை, அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு ஒட்டு மொத்தமாக எல்லா மக்களும் ஒருமித்த ஒரே குரலாக ஒரே உணர்வாக, ஒரே இயக்கமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல இந்த மக்களினுடைய அரசியல் அதாவது அரசியல் அபிலாசையை நிறைவு செய்யக்கூடிய ஒரு தீர்வின் மூலமே இந்த பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் அளவிற்கு உங்களுடைய மக்களுடைய எழுச்சி இன்று எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் முதல் தடவையாக புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள், தமிழ் நாட்டில் இருக்கின்ற ஏழு கோடி தமிழ் மக்கள் எல்லாருமே என முழு உலகத் தமிழினமே இன்று ஒருமித்த குரலாக, ஒரே சக்தியாக, ஒரே உணர்வாக எழுச்சிக் கொண்டிருப்பது இதுதான் வரலாற்றில் முதல் தடவை. இதை எல்லா நாடுகளும் உணரத் தொடங்கியிருக்கின்றன. இந்த சக்திக்கு முன்னால் எங்களுடைய அரசியல் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தற்போது அங்குள்ள மக்கள் உணர்ச்சி உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அங்கு பல தீக்குளிப்புகளும் இடம்பெறுகின்றன. இதனை நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அவர்கள் எங்களுடைய இரத்தத்தின் இரத்தமாக, எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக இருந்து வருபவர்கள். இங்கே எங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அவர்களால் அதை பொறுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரே குரலாக, ஒருமித்த குரலாக இருக்கின்றனர்.

இங்கே நடக்கின்ற கொடுமைகள், இங்கே நடக்கின்ற அரச பயங்கரவாத செயல்களை அந்த மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் அவர்களுடைய உணர்வுகள் அதியுச்ச நிலையை அடையும்போது அவ்வாறான தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.


இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியா எந்தவிதமான கொள்கைகளை எடுக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர்?
இந்தியாவினுடைய வரலாற்று ரீதியான உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள இந்த நேரத்திலாவது முன்வர வேண்டும். வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள்தான் இந்தியாவினுடைய நல்ல நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். கடந்த காலத்தில் பல எடுத்துக்காட்டுகளை இதற்கு நாங்கள் எடுத்துக் காட்டலாம்.

இந்தியாவிற்குச் சோதனைகள் ஏற்பட்டிருக்கின்ற போது எல்லாம் இந்தியாவின் பக்கம் நின்று தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளம் குரல் கொடுத்திருக்கின்றார்கள். இந்தியா இதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அப்படியானால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் இராணுவ ரீதியான உதவிகள் - அண்மையில் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுவினர் வந்து இறங்கியிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மத்தியில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற ஒரு நிலையில்தான் நடவடிக்கைகள் நடக்கின்றன. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்?
நாம் தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டாம் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். அது மட்டுமல்ல இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள், அகில இந்திய அரசியல் கட்சிகள் கூட தற்போது வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள்ளே எங்களுக்கு ஆதரவான சக்திகள் தோன்றியுள்ளன.

அண்மையில் கூட உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் தமது பதவியில் இருந்து விலகி தமது உணர்வைப் பிரதிபலித்தார். அதேபோல இந்திய மத்திய அரசுக்குள்ளும் இவ்வாறு எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கூடிய சில செயற்பாடுகளை அங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

வன்னியில் இருந்து பெருமளவிலான மக்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து விட்டார்கள் என்று தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?
அது உண்மையில் ஒரு தீவிரமான பொய்ப்பிரச்சாரமாகும். ஒரு சில மக்கள் இராணுவ நடவடிக்கையின் போது அகப்பட்டுக்கொண்ட காரணத்தினால் அங்கே சென்றிருக்கிறார்கள். அதனை வைத்துக்கொண்டும் மற்றும் காயப்பட்ட மக்கள் கப்பல் மூலம் அங்கே சென்று அவர்களுடைய சிகிச்கை முடிந்தப்பின் அங்கேயுள்ள திறந்த வெளி சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு வருவதும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான மக்களை வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றது. இங்கேயுள்ள அநேகமாக எல்லோருக்கும் இது தெரியும்.

தென்பகுதியில் தற்போது ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் ஒரு பாரிய அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. தாம் எதை எதிர்பார்க்கின்றதோ, தாம் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறதோ அந்த செய்திகள் மட்டுமே மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. இதற்கு எதிர்மறையாக தாயக மண்ணில் ஊடகங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களுக்கான சுதந்திரத்தைப் பேணி அவர்களை இன்று ஊக்கப்படுத்துகிறார்கள். ஏன் குறிப்பாக இந்த கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன் என்றால் இன்று உலகத்திலேயே இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஒரு வானொலி புலிகளின் குரல் வானொலி என்பதால் இந்த கேள்வியைக் குறிப்பாக முன்வைக்கின்றேன்.

இங்கே எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரம் முற்றும் முழுதாக இருக்கின்றது. புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் போன்ற பத்திரிகை வெளிவருகின்றன.

புலிகளின் குரல் வானொலி ஊடாக மக்கள் சகல செய்திகளையும் அறிந்து வருகின்றார்கள். சகல செய்திகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் உண்மையான செய்திகளே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இங்கேயுள்ள மக்கள் எல்லாரும் தொடர்ச்சியாக புலிகளின் குரலைக் கேட்டு வருகின்றனர். புலம்பெயர் மக்கள் கேட்டு வருகின்றனர். அதேபோன்று இங்கே வெளியாகின்ற ஈழநாதம் பத்திரிகையும் தொடர்ச்சியாக படித்து வாசித்து அறிந்து வருகின்றனர். நாங்கள் ஊடகங்களில் தலையிடுவதில்லை. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன.

ஊடகச் சுதந்திரம் முற்றும் முழுதாகப் பேணப்படுகிறது. உண்மையான செய்திகள் தான் எங்களது ஊடகங்கள் மூலம் மக்களுக்குப் போய் சேர்கின்றன. அதுமட்டுமல்ல அனைத்துலக ஊடகவியலாளர்களுக்குக் கூட நாம் அழைப்புக்கள் விடுத்திருக்கின்றோம். எங்களுடைய பிரதேசங்களில் வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு இங்கேயுள்ள யுத்த சூழல், மக்களுடைய மனநிலை எல்லாம் அறிந்து கொள்ளுமாறு நாங்கள் அனைத்துலக பத்திரிகையாளர்களுக்குகூட அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று சிங்கள பிரதேசத்தில் உள்ள சில பத்திரிகையாளர்கள் கூட எங்களுடைய உண்மையான செய்திகளை வெளியிட்டு, அங்கே பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் பழிவாங்கப்படுகின்ற சம்பவங்கள் நிறைய இடம்பெற்றதையும் இந்த வேலையில் குறிப்பிட விரும்புகின்றேன்.

பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர் மக்களால் 'வணங்கா மண்' என்ற கப்பல் தாயக மக்களுக்கான உதவிப் பொருட்களோடு புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தாயக மக்கள் எவ்வாறு எதிர்பார்த்து இருக்கின்றனர்?
தாயக மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனென்றால் எங்களுடைய மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களுடைய இந்த உறவுகள் தங்களுடைய முயற்சியினால், தங்களுடைய மக்களுடைய பசியை, பட்டினியைப் போக்குவதற்கான எல்லா வீடுகளுக்கும் சென்று உணவுப் பொருட்களைச் சேகரித்து ஒரு கப்பல் மூலம் இங்கே அனுப்பும் போது எங்களுடைய மக்கள் மிக ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

ஆனால் சிங்கள அரசு அண்மையயில் சில அறிக்கைகள் விட்டிருக்கின்றது. அந்தக் கப்பல் வந்தால் தாங்கள் இங்கே நடவடிக்கை எடுப்போம். அந்தக் கப்பலைத் தாக்கிடுவோம் என்று கூட கூறியிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு மனிதாபிமான செயலுக்குக் கூட இங்கே இடமில்லாத அளவிற்கு சிங்கள அரசினுடைய அராஜகம் தலைத்தூக்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையிலாவது உலக நாடுகள் சிறிலங்கா அரசினுடைய இவ்வாறான பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வர வேண்டுமென நாம் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.

இன்று புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து எழுச்சி நடவடிக்கைகளிலும் தமிழீழ தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. இது எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசாங்கத்தை விசனத்திற்குள்ளாக்குகின்றது?
முழு உலகத் தமிழினமும் ஒரு குடைக்குள் ஒன்று சேர்ந்து நிற்கின்றது என்பது சிறிலங்கா அரசிற்கு ஒன்று நன்றாகத் தெரிகின்றது. உலகத் தமிழினத்தின் சின்னமாக இந்தப் புலிக்கொடி உலக நாடுகளில் குறிப்பாக உலகத்தில் உள்ள முக்கியமான எல்லா தலைநகரங்களிலும் இந்தக் கொடி பறக்கின்றதைப் பார்க்கும் போது ஒரு அடக்கமுறையாளனுக்கு எங்கள் மீது இனவாதத்திற்குரிய அதியுச்ச உணர்வு கொழுந்துவிட்டு எரிவதை அவர்களுடைய பிரதிபலிப்புகள் மூலம் அறியக்கூடியதாய் இருக்கின்றது.

அனைத்துலக நாடுகளில் எழுச்சி நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒவ்வொரு வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அனைத்து வடிவங்களின் ஊடாக அனைத்துலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் மக்கள் சொல்ல வேண்டிய முக்கிய விடயம் என்ன?
எல்லா இடங்களிலும் எல்லா நாடுகளிலும் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்கள் மக்கள் முழு உலகமே உணரச் செய்யும் அளவிற்கு எழுச்சி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அது இன்றைக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை, ஏனைய நாடுகள் அங்கீகரிக்கும் அளவிற்கு, ஏனைய நாடுகள் எங்கள் போராட்டம் தொடர்பாக போராட்டத்தின் நிலைத்தன்மை தொடர்பாக உணரச் செய்யும் அளவிற்கு அந்த மக்களுடைய எழுச்சி எல்லா இடமும் காணப்படுகிறது.

இதில் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளாக இருக்கட்டும், கனடாவாக இருக்கட்டும் கடந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பேன், வருகின்ற சனிக்கிழமை சிட்னி. இதில் குறிப்பாக இளையோர் அந்த மக்களுக்கு நமது விடயங்களை எடுத்துச் செல்லும் விதமாக வேறு வேறு பல வடிவங்களில் இந்த போராட்டங்களை எடுத்துச் செல்ல தம்மாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இதனைப் பார்க்கின்றோம். எங்களுடைய மகிழ்ச்சி மட்டுமல்ல; எங்களுடைய மக்கள்; எங்களுடைய இயக்கம்; எங்களுடைய தலைவர்; எங்களுடைய தளபதிகள் எல்லாருக்கும் எழுச்சியாக இருக்கின்றது.

எங்களுடைய மக்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைய தலைமுறைகள் மிகவும் எழுச்சியாக கடந்த காலங்களை விட தற்போது இன்னும் மிக மிக எழுச்சியாக எல்லா நாடுகளிலும் வித்தியாசமான எழுச்சி போராட்டங்களை நடத்துவதன் ஊடாக முழு உலகத்தையும் எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிக்கின்ற அளவிற்கு மக்களுடைய எழுச்சி என்றுதான் நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.

ஊடகங்களின் ஊடாக மக்களின் எழுச்சியினை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. எங்களுடைய தேசியத் தலைவர் எப்போதும் புலம்பெயர் இளைய தலைமுறை தொடர்பாக பெரிய நம்பிக்கையோடும் பெரிய எதிர்ப்பார்ப்போடும் இருக்கின்றார்.

இது எந்த வகையில் தாயகத்தில் உள்ள மக்களையும் போராளிகளையும் எழுச்சி கொள்ள வைக்கின்றது?
மக்களுடைய ஒவ்வொரு போராட்டமும் அங்கே உள்ள நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை, கோட்பாட்டாளர்களை ஈர்க்கக்கூடிய முறையில் அவர்களின் போராட்டம் எழுச்சித் தன்மை உடையதை நாங்கள் உணரக்கூடியதாய் இருக்கின்றது. அந்த வகையில் எமது ஒட்டுமொத்த மக்களும் புலம்பெயர் இளைய தலைமுறையினர் தொடர்பாக பெரிய நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.

நாங்கள் இப்படியான போராட்டங்களைச் செய்யும்போது, எமக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை அனைத்துலகத்திற்கு நாங்கள் எவ்வாறு முன்வைக்க வேண்டும்?
எங்களுடைய போராட்டம் எங்களுடைய தீர்வு என்பது முற்றும் முழுதான சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாகக் கொண்டது. நாம் ஏற்கனவே போராட்டத்தில் கோட்பாடு, போராட்டத்தில் இலக்கு என்பதை எங்களுடைய மக்கள் 77 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஊடாக முழு உலகத்திற்கும் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது தமிழீழ தனியரசு அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இதுதான் எங்களின் தீர்வு. இந்தத் தீர்வின் ஊடாகத்தான் எங்களுடைய மக்கள் நிம்மதியான, அமைதியான, சுதந்திரமான வாழ்வை வாழ முடியும்.

இதிலே புலம்பெயர் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணி ஒரு பாரிய பணி. எமக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஊடகங்களுக்குள் இருந்தாலும் நாங்கள் அந்த சந்தர்ப்பத்தில் தாயக மக்களின் அவலங்கள் தொடர்பாக எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் அதனுடைய நியாயத்தன்மை தொடர்பாகவும் நாங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எல்லா ஊடகங்களும் இன்று சிங்கள அரச பயங்கரவாதத்தினுடைய செயற்பாடுகளை அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள் உணரும் வண்ணம் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக செய்ய வேண்டும்; அது மட்டுமல்ல எங்களுடைய போராட்டம் கடந்த காலத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது; கடந்த காலத்தில் எவ்வாறான போராட்டங்களில் இருந்த ஆயுதப் போராட்டமாக இன்று நாம் வளர்ச்சி பெற்றது எப்படி என்பதை எல்லாம் அடுத்து சொல்லி வருகின்றீர்கள். தொடர்ந்து இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டும்.

ஊடகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது சின்ன விடயம். அதை நாம் பெரிதாக பார்க்கக் கூடாது. எங்கள் மக்களின் அரசியல் இலட்சியம், போராட்டம், எங்களுடைய மக்கள் இதற்காக இவ்வளவு பெரிய தியாகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை நீங்கள் உலகத்திற்குத் தொடர்ச்சியான வலியுறுத்தி வர வேண்டும் என்பதைத் தான் நாங்கள் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.

இன்று தாயகத்தில் மக்கள் கொடுக்கும் அந்த அதி உச்ச விலை உங்களைத் தனிப்பட்ட ரீதியில் எந்த அளவில் பாதித்திருக்கின்றது?
அதாவது எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது மிக விரைவாக வெற்றி கொள்ள வேண்டும் என்பதான உணர்வைத்தான் எங்களுக்குத் தருகின்றது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சொல்ஹெய்ம் நடேசனுடன் தொலைபேசியில் உரையாடினார்;


நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த உரையாடலின் போது, இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேசத்தின் நிலை குறித்து, சொல்ஹெய்ம் விளக்கமளித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்ஹெய்ம் இதன் போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நடேசனும் தமிழர் படுகொலைகள் குறித்து தகவல்களை வழங்கியதாக புலித்தேவன் இன்று காலை குறிப்பிட்டார்.

நாள்தோறும் வன்னியில் சிறிய நிலப்பரப்புக்குள் கட்டுண்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உட்பட்ட 100 பொதுமக்கள் வரை படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக நடேசன் இதன் போது குறிப்பிட்டார்.

இந்தநிலையில், கொலைகளை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என நடேசன், சொல்ஹெய்ம்மிடம் வலியுறுத்தினார்.

அத்துடன் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையின் கீழ் வாழ விரும்பவில்லை என்றும், அவர்கள், தமிழ்தேசம் என்ற அபிலாசையுடன் வாழ விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்த நடேசன், இதற்கு சர்வதேச முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்ஹெய்மிடம் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்தை சர்வதேசம் உரியமுறையில் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவில்லை: புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்


தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு போரை மாத்திரமே தமிழீழ விடுதலைப்புலிகள் நம்பியிருக்கவில்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைமையாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசியல் தீர்விற்கு ஆரோக்கியமான சூழ்நிலை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப்புலிகளும் சம அந்தஸ்தை கொண்ட பங்காளிகள் என்ற வகையில் சர்வதேசம் கொழும்பின் மீது பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தையும் போர் நிறுத்தத்திற்கான அவசியத்தையும் உணர்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மீறி வருகின்றது. ஏற்கனவே, இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை அம்சங்களை மறுத்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தில் பத்தொன்பது வருடங்களாகவும் மணலாறு, திரியாய் போன்ற பிரதேசங்களில் பதின்நான்கு வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உரிய வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சர்வதேசம் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனடிப்படையிலேயே வன்னியில் பொதுமக்களை பாதுகாத்து வருகின்றார்கள்.
எனினும், இதனை வைத்துக்கொண்டு பொதுமக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை பத்மநாதன் மறுத்துள்ளார்.

தமிழ் நாட்டு மக்கள் ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இன்று பாரிய கரிசனையை கொண்டிருக்கின்றார்கள். புலம் பெயர்ந்த மக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு தமது அழுத்தங்களை முன்வைக்க வேண்டும் என பத்மநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியில் மக்கள் பாரிய அவலங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். குண்டு வீச்சுகள், எரிகணை வீச்சுக்கள், தாக்குதல்கள் போன்றவற்றில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் என பலரும் பாதிக்கப்படும் அதேநேரம் நோயின் தாக்கமும் அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தை யுத்த நிறுத்தத்திற்கு வலியுறுத்தும் அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளும் உரிய முறையில் இடம்பெறவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர்களின் அங்கீகாரத்தை பெற்றவர்கள் எனவே, அவர்களை சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டும்.

சர்வதேச ரீதியில் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வரும் நடைமுறைகள் இடம்பெற்றிருக்க வில்லை எனவே, சர்வதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளை அவ்வாறு கோருவதில் அர்த்தமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை கோருவது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்கொண்டுவதற்காகவே. இந்த காலகட்டத்தில் அவர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற கருத்து பிழையானது.

கவனமாக ஆராய்ந்தால் 2002 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகளை விட இலங்கை அரசாங்கமே இராணுவ பலத்தை அதிகரித்துள்ளதை காணமுடிகிறது என பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மாத்திரமல்ல ஏற்கனவே கொக்கட்டிச்சோலை படுகொலை, மட்டக்களப்பு ஊரணி படுகொலை, பொலன்னறுவை மயிலந்தனை படுகொலை, அல்லைப்பிட்டி படுகொலை, வங்காளை மற்றும் செம்மணி புதைகுழி போன்றவற்றை தமிழர்கள் மறக்கவில்லை. இதன் ஒரு தொடர்ச்சியாகவே வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள்.

புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றார்கள்.

இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் படுகொலை மற்றும் யுத்தம் தொடர்பான 6 சான்றுகளை தமிழர் படுகொலைக்கெதிரான அமைப்பினர் தமது வழக்குத்தாக்கலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச இராஜதந்திர உறவுகளுக்கான தலைமையாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு ஆதாரங்கள் உள்ளன: விடுதலைப் புலிகள்

பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்று விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் கூறியிருப்பதாவது:

ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வழிகாட்டியுள்ளது. பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவதை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்கள் அறிவார்கள்.

சமீபத்தில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியபோது செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு பணியாளர் காயமடைந்தார்.

மேலும், மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை அரசு மருந்துப் பொருட்கள் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

முல்லைத்தீவில் பொதுமக்களின் நிலை குறித்து ஆராய சர்வதேசப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் உண்மை வெளிவரும்.

பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப்பட்டது: நேற்று மட்டும் 100 படையினர் பலி;450 பேர் காயம்


புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் 1000 ற்கு மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் 100 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், 450 வரையான படையினர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்னியில் இன்று புயலுடன் கூடிய மழையினால் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் பல புயலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மழைக்குள் மக்கள் இருக்க வேண்டிய அவலம் எழுந்துள்ளது.


இதேவேளை பொது மக்களை இலக்கு வைத்து இன்றும் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

வாழ் நிலங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவது ஒரு பாரதூரமான வரலாற்றுத் தவறு; தடை முகாம்கள் நடத்த உலகம் ஆதரவும் நிதியும் வழங்கக் கூடாது: பா.நடேசன் வே


தமது வாழ்விடங்களில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அதனை விடுத்து விட்டு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெறியேற்ற முயற்சிப்பது வேதனையானது. தீர்வு ஒன்றை காண்பதற்காக 'காசா' பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவிவில் இருந்து ஒளிபரப்பாகும் 'ரைம்ஸ் நௌவ்' தொலைக்காட்சிக்கு இன்று திங்கட்கிழமை பா.நடேசன் வழங்கிய நேர்காணல் பின்வருமாறு:

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான உங்களின் பதில் என்ன?

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டர் நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா வேறு நாடுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே யாரும் போரை நிறுத்தும் படி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

காசா பகுதியை விட வன்னியில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. உலக நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, அது அணிசேரா நாடுகள், ஐ.நா. போன்றவற்றிலும் உறுப்புரிமை உள்ள நாடு. உலகின் இந்த நிலைப்பாடு ஆளுகைக்கு உட்பட்ட நாடு என்ற வாதத்தின் அடிப்படையிலானது அல்ல.

இருந்த போதும், ஐ.நா. மற்றும் உலகின் மனிதாபிமான சமூகம் என்பன வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முக்கிய கவனத்தை இதுவரையில் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களின் இடங்களில் இருந்து வெறியேற்றுவதற்கு முயற்சிப்பது வேதனையானது. நான் ஒன்றை கேட்கின்றேன், தீர்வு ஒன்றை காண்பதற்காக காசா பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐ.நா. ஆதரிக்குமா?

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் அனைத்துலகத்திற்கு ஆபத்தானது அல்லாத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து சிறிலங்காவின் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு சில நாடுகள் கவலைப்படுவது வேதனையானது. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் துன்பத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளை புரிவதுடன், மனித பேரவலத்தையுத் தடுக்க முன்வர வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன?

சிங்கள படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களினால் இங்கு நாளாந்தம் 50 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவர்களின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலினால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவதனை அனைத்துலக சமூகத்தின் செயற்திறன் அற்ற நடவடிக்கை ஊக்கிவிக்கின்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் ஒன்றை மட்டும் தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. அதற்கான உங்களின் பதில் என்ன?

வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது. அவர்களை நேர்காணல் காண்பதற்கு இராணுவத்தினரால் வழிநடத்தப்படும் ஊடகங்களையே அனுமதித்து வருகின்றது. துன்பத்தினாலும், அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் இராணுவத்தை விடுவிப்பவர்களாக சித்தரிக்கின்றது.

ஆனால், சில அனைத்துலக ஊடகங்களின் தகவல்களின் படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்ற மக்கள் மீண்டும் வன்னிக்கு திரும்பவே விரும்புவதாக அறியமுடிகின்றது. இந்த தமிழ் மக்களை பிரச்சாரத்திற்கான கேடயமாக சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருவதுடன், அவர்களை நிரந்தரமாக அகதிகளாக்கவும் முற்பட்டு வருகின்றது.

அரசு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்தி பெருமளவில் திட்டமிட்ட பிரச்சாரத்தினை படை நடவடிக்கைகளுடன் இணைத்து மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு தொடர்பான சிறிலங்கா அரசு காண்பித்து வரும் அசிரத்தையும், தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையும் நோக்கும் போது ஒன்று மட்டும் உறுதியானது. அதாவது, படையினர் மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தான்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சில நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதற்கான உங்களின் பதில் என்ன?

இவை எல்லாம் தமது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நடவடிக்கையை மெருகுபடுத்தும் வார்த்தைகள். ஜனநாயக வழிகளில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முன்மொழிந்த சுயாட்சியும், தமிழ் மக்களின் உரிமையுமே எமது நோக்கம்.

எனவே, பெருமளவில் தமிழ் மக்களை அவர்களின் வாழ்நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடாது. அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்து கொண்டு தடை முகாம்களுக்கு நிதிகளை வழங்குவார்களாக இருந்தால் அது உண்மையாகவே இது ஒரு வரலாற்று பேரழிவும், தவறுமாகும்.

மிகவும் கொடூரமான அரசுகள் பலவந்தமாக பொருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களின் செர்ந்த இடங்களில் மீண்டும் குடியேற்றியதாக உலகின் எந்தப்பகுதியிலும், எப்போதும் வரலாறு இல்லை. ஆனால், அனைத்துலக சமூகம் தமது சுருதியை மாற்றியுள்ள போதும் மீண்டும் பழைய கோசத்தையே தற்போதைய புதிய சூழலிலும் பயன்படுத்தி வருவது வருத்தமானது.

மீளக்குடியமர்த்துதல், மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நேரடியாக வழங்குவது தொடர்பாக அனைத்துலக கொடையாளி நாடுகளுக்கான உங்களின் கருத்துக்கள் என்ன?

கொழும்பு போன்ற பிரதேசங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது. மக்களை மீளகுடியமர்த்துவதாக சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்து வரும் வாக்குறுதிகள் அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றதும், அதே வேகத்தில் காணாமல் போய்விடும்.

ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வந்திருந்தன. முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பில் கிளின்டன் கூட இதனை மேற்கொண்டிருந்தார். ஒன்றுமையையும் அரசியல் தீர்வையும் பலப்படுத்தும் வழி இதுவென கருதப்பட்டது. ஆனால் நீதித்துறையை தவறாக பயன்படுத்தி அதனை சிறிலங்கா அரசு சீரழித்து விட்டது.

தற்போது கூட மக்கள் முன்னணி அரசில் அங்கம் வகிப்பவர்களும், அரச தலைவரின் சொந்த கட்சியில் இருப்பவர்களும் தாம் இராணுவத் தீர்வுக்கே ஆதரவுகளை வழங்குவோம் எனவும் அதிகார பரவலாக்கத்திற்கு அல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர்.

போரை நிறுத்தி, மக்களை தமது வாழ்விடங்களில் வாழ அனுமதித்து, அவர்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதிப்பதே உண்மையான மனிதாபிமானம். தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை மக்களை அரசு நடத்தும் முறை, மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பான சிறிலங்கா அரசின் உண்மையான தோற்றத்தை உலகில் உள்ள மனிதாபிமான சமூகம் தமதிக்காது உணர்ந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே அதற்கான உங்களின் பதில் என்ன?

தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெறியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது. இங்கு தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இங்கு தொடர்ந்து வாழவே விரும்புகின்றனர். சிறிலங்கா அரசு, ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகள் போன்றவை தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக தமது அறிக்கைகளில் தெரிவித்தவாறு அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் முட்கம்பிகளுடன் கூடிய முகாம்களுக்குள் அடைப்பதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ். குடநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தசாப்பதற்கு மேலாக அரசு ஆக்கிரமித்துள்ள இடங்களில் மீளக்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிலும் இது நிகழ்ந்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் பின்னர் சம்பூரில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் பல இடங்கள் தமிழ் மக்கள் செல்ல முடியாத பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களை தனக்கு ஆதரவான துணை இராணுவக்குழுவினரை பயன்படுத்தி அரசு மிரட்டி வருகின்றது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. கிழக்கில் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஆபத்தான நிலமையில் தமிழ் மக்கள் இந்த தடை முகாம்களுக்குள் விருப்பத்துடன் செல்ல வேண்டுமா? தமது பாரம்பரிய வாழ்விடங்களை கைவிட்டு தமிழ் மக்கள் வெயேற வேண்டும் என ஐ.நா.வும், ஏனைய நாடுகளும் எதிர்பார்க்கின்றனவா? வெளியேறும் மக்களை தடை முகாம்களுக்குள் அடைப்பதற்கு அவை முயற்சிக்கின்றனவா? இந்த முயற்சி தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்துடன் தான் மேற்கொள்ளப்படுகின்றதா?

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்களை வெளியேற்றவும் முற்றாக அழிக்கவும் முயன்று வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 61 வருடங்களாக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அழைப்பை பயன்படுத்தி மக்களை வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கையை, தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசு ஏற்கெனவே நிராகரித்து விட்டது.

தமிழ்நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது.

அத்தோடு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்பக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும்.

அத்தோடு, பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதே ஓர் போர் நிறுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆயுதங்களை கீழே போடுவதற்கான எந்த கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில், இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும்.

இந்தியா இப்போது, போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒர நிரந்தரத் தீர்வு காணவே சிறிலங்காவை வலியுறுத்த வேண்டும்.

போர்க்களத்தில் பொட்டுஅம்மன்:புலிகளை வழிநடத்தும் பொறுப்பு


முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு நகரையொட்டியுள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

தற்போது, இந்த போரில் புலிகள் இயக்க புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வலது கரமாக கருதப்படுபவருமான பொட்டு அம்மன் குதித்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு முதல் சிங்கள ராணுவத்தின் 58-வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை அவர் வழிநடத்த ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக இலங்கை பாதுகாப்பு படை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி நேற்று காலை வரையில் நடந்த மோதல்களின்போது விடுதலைப்புலிகளை பொட்டு அம்மன் வழி நடத்தி இருக்கிறார் என்றும் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

3 நாட்களுக்கு முன்பு, 58-வது படைப்பிரிவினர் பெரும் உயிர்ச்சேதங்களை சந்தித்திருந்ததும், ஆயிரத்துக்கும் மேலான ராணுவத்தினர் இறந்தும், 3 ஆயிரம் பேர் வரை காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு நகரை பிடிக்க முனையும் சிறிலங்காவும், தடுத்து தாக்கும் புலிகளும் உக்கிர சமர்: இதுவரை 1,000 படையினர் பலி;3000 பேர் காயம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையின் அதி சிறப்புப் படையணிகள் பலமுனைகளில் மேற்கொள்ளும் படையெடுப்பை எதிர்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் சமரில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா தரைப் படையின் 53 ஆவது, 58 ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 3 (Task Force - 3) மற்றும் சிறப்பு தாக்குதல் படைப்பிரிவு - 4 (Task Force - 4) ஆகிய அதிசிறப்பு வலிந்த தாக்குதல் படையணிகள் ஐந்து முனைகளில் இருந்து பெரும் படையெடுப்பை நிகழ்த்துகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர் கட்டளைப் பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மூன்றாவது நாளாக -

புதுக்குடியிருப்பை கைப்பற்றுவதற்கான கடும் ஐந்து முனை தாக்குதலில் சிறிலங்கா படையினரும், அவர்களை எதிர்கொண்டு கடும் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படையணிகளும் தொடர்ந்தும் கடும் சமரில் ஈடுபட்டுள்ளன.

"சொந்த நிலத்தில் நிம்மதியாய் வாழ வழி செய்யாமல் தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் மேற்குலகம்": 'புதினம்' நிருபரிடம் பா.நடேசன் கவலை

அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார்.
வன்னியில் போர் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் மேற்குலகமும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களும் ஈடுபட உள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக பா.நடேசனிடம் 'புதினம்' நிருபர் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து கூறும் போது -

"தமது வாழ்வாதாரங்களை விடுத்து, 'நலன்புரி நிலையம்' என்ற போர்வையில் சிறிலங்கா அரசு திறந்து வைத்திருக்கும் இராணுவத் தடுப்பு வதை முகாம்களுக்கு போய்விடும் படி கூறுவது ஒரு சுத்தமான இன அழிப்பு ஊக்குவிப்பு முயற்சி.

தமிழர்களின் வளமான நிலங்களை ஆக்கிரமித்து - அவர்களை பொருளாதார ஆதாரங்கள் அற்றவர்களாக்கி - அவர்களின் தேசியத் தன்மையைச் சிதைத்து, அவர்களை நிரந்தரமாக அகதிகள் முகாம்களுக்குள் முடக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு துணை போகும் செயல்." என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது -

"யாழ். குடாநாட்டில் - 1990 ஆம் ஆண்டில் பலாலி படைத் தளத்தை விரிவுபடுத்திய போது, அதனைச் சூழ இருந்த மிகுந்த வளம்மிக்க ஏராளமான நிலத்தை சிறிலங்கா ஆக்கிரமித்தது. அந்த ஊர்களில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்று வரை - பதினெட்டு வருடங்களாக - அகதிகள் தான்.

யாழ். குடாநாடு சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் கடந்த 13 வருடங்களாக இருக்கின்ற போதும் - அந்த வளமான நிலங்களை 'உயர் பாதுகாப்பு வலயங்க'ளாக்கி, அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர விடாமல் நிரந்தர அகதிகள் ஆக்கிவிட்டது சிறிலங்கா.

இதேபோன்று - மிக அண்மையில் - சம்பூர் முதற்கொண்டு கிழக்கில் சிறிலங்கா ஆக்கிரமித்த பல இடங்களில் மீளக்குடியமர தமிழ் மக்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக - 1948 ஆம் ஆண்டில் தொடங்கிய சிங்கள குடியேற்ற நடவடிக்கைகள் தான் இப்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வன்னி மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த முயலும் மேற்குலகம், இந்த வரலாற்றுப் பின்னணிகளையும் - சிங்களப் பேரினவாதத்தின் கபட எண்ணங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

தமது சொந்த நிலங்களில் நிம்மதியாய் வாழ விரும்பும் மக்களை - புலிகளின் 'மனிதக் கேடயங்கள்' எனப் பிரசாரமிட்டு - வதை முகாம்களுக்கள் முடக்க முயற்சிக்கும் சிறிலங்காவின் திட்டத்திற்கு, மனித நேயத்தினை மதிக்கும் நாடுகள் துணை போகக் கூடாது," எனவும் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்தார்.

"சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 'நலன்புரி நிலையம்' எனப் போர்வையிடப்பட்ட வதை முகாம்களில் நடைபெறும் கொடூரங்கள் நன்கு அம்பலமாகியுள்ள நிலையில் தமிழர்கள் ஏன் அங்கு போவதனை விரும்பப் போகின்றனர்?...

வன்னிப் பகுதியின் போர்ச் சூழலில் இருந்து வெளியேறுவது மட்டுமே, தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினைக் கொடுத்துவிடும் என எப்படிச் சொல்ல முடியும்?...

தமிழீழ மக்களின் அறிவு ஆளுமை, பொருளாதார மேம்பாடு, கலாச்சாரம் வாழ்வு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை அழித்தொழிப்பதனை நோக்கமாக கொண்ட ஒரு நிரந்தர இன அழிப்பு நடவடிக்கையே இதுவாகும் என்பதை ஏன் இந்த உலகம் உணர்ந்துகொள்ளத் தவறுகின்றது?.." என அவர் சில கேள்விகளையும் எழுப்பினார்.

"சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலை, ஆட்கடத்தல், மனித உரிமை மீறல் மற்றும் இராணுவப் படையெடுப்புக்களினால் - ஏற்கனவே பல லட்சம் தமிழர்கள் தமது சொந்த இடங்களை விட்டு விரட்டப்பட்டு - இரவல் வீடுகளிலும், தமது உறவுகளுடனும், வெளிநாடுகளில் வாழும் தமது உறவுகளின் உதவிகளில் தங்கி வாழவும், வேறு நகரங்களில் போதிய வருமானங்கள் இன்றி அல்லற்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கினை மாற்றி, தமிழ் மக்கள் மீது அதனால் திணிக்கப்பட்டுள்ள மனிதப் பேரவலங்களை நீக்கி, தமிழர்களுக்கு எந்த உத்தரவாதமும் அற்ற அதன் அரசமைப்பையும் மாற்றியமைக்க முடியாத இந்த உலகம் - இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு போகும்படி எப்படிச் சொல்ல முடியும்?... அங்கு போவதனை தமிழர்களும் ஏன் விரும்பப்போகின்றனர்?

நியூயோர்க் நகரில் தலைமையகத்தினை கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடந்த வார அறிக்கை, சிறிலங்கா அரசு செய்து வரும் மனிதப் படுகொலைகளையும், மருத்துவ நிலையங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் மற்றும் வன்னியில் இருந்து வெளியேறுவோர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவதனையும் கண்டித்திருந்தது.

பல அனைத்துலக செய்தி நிறுவனங்களும் - இந்த தடுப்பு முகாம்களை - இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதான யூத இனப் படுகொலை வதை முகாம்களுக்கு இணையானவை என சுட்டிக்காட்டி இருந்தன.

இவ்வாறான வதை முகாம்களுக்குள் தமிழ் மக்களினை தள்ளி விடுவதற்கே, அவர்கள் வன்னியில் தற்போது புலிகளின் 'மனிதக் கேடயங்கள்' ஆக உள்ளனர் என்ற பிரசாரம் சிறிலங்காவால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும்." என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

"பல உலக நாடுகளுக்கும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் நன்கு தெரிந்திருந்தும், அவை 'மனிதக் கேடயம்' என்ற சொல்லை தமது அறிக்கைகளில் பாவிப்பதால், தனது போர் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அங்கீகாரமாகவே சிறிலங்கா அரசு அதனை எடுத்துக்கொள்ளுகின்றது," எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக -

"உலக வரலாற்றில் இவ்வாறு தமது பூர்வீக பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்ட பல லட்சம் மக்களை அடக்குமுறை அரசுகள் மீளக் குடியமர்த்தியதாக தடயம் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் தமிழ் மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு போவதனை விரும்பவில்லை.

'நலன்புரி நிலையங்கள்' என்ற போர்வையில் தமிழின அழிப்பு வதை முகாம்கள் அமைக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசிற்கு மனித நேயமிகு அனைத்துலகம் துணை போகக் கூடாது என்பதுடன் -

வன்னிக்கு உடனடியாக பக்க சார்பற்ற உலக ஊடகவியலாளர்கள், மனித உரிமை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை அனுப்பி நிலைமைகளை நேரில் அவதானித்து - போரை நிறுத்தி, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மக்களுக்கு சென்றடையச் செய்வதுமே இன்று இந்த உலகம் ஆற்ற வேண்டிய உடனடி மனிதாபிமான பணியாகும்" என அவர் தெரிவித்தார்.

ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதற்கு முன்னர், போர் நிறுத்தத்தையும் நிரந்தர தீர்வையும் சர்வதேசம் வலியுறுத்த வேண்டும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றுக்கு முன்னுரிமை கொடுத்த பின்னரே ஆயுதங்களை கைவிடும் கோரிக்கையை வலியுறுத்த முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர், இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்துள்ளார். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு சர்வதேச உத்தரவாதம் கிடைக்குமானால் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் என்ற விடயத்திற்கு அவசியம் இருக்காது என்றும் நடேசன் நேற்று விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வன்முறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்றும் இணைத்தலைமை நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நடேசன், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் நாள்தோறும் இனப்படுகொலை பயங்கரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக நடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்களின் தாயகமாகும். இந்தநிலையில் கடந்த 50 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து 25 வருடங்கள் சாத்வீக போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் அது இலங்கை அரசாங்கத்தினால் அடக்கப்பட்டது.

அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளும் தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் நடத்தப்பட்டன. தமிழர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள்.

1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவர்களின் வாக்குகள் மூலம் தமது அரசியல் இலக்கான சுதந்திர நாடு மற்றும் வடக்கு கிழக்கு தாயகம் என்பவற்றை உலகத்திற்கு அறிவித்தனர்.

இந்தநிலையில் தமிழ் மக்களின் தீர்ப்பை தமது தேசிய கடமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றதாக நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் முன்னிலையில் உள்ளபோது இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வருவதும் பின்னர் அந்த பேச்சுவார்த்தை காலத்தில் தமது இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு செல்கின்ற நடைமுறையை மேற்கொண்டு வந்துள்ளதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது 1985 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கம் எப்போதுமே இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்ததே தவிர அரசியல் தீர்வில் நாட்டம் கொள்ளவில்லை

இந்தநிலையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக எனத் தெரிவித்து மனிதாபிமான பணியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றியது. அத்துடன் சிங்கள படையினரால் தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டமையை சுட்டிக்காட்டியவர்கள், பயங்கரவாதிகள் அல்லது வெள்ளைப்புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டனர்

ஹிட்லர் அரசாங்கத்தில் இருந்து ருவன்டா மற்றும் சூடான் அரசாங்கம் வரை இனப்படுகொலைகளை மேற்கொண்டன. அதேபோல தான் இலங்கை அரசாங்கமும் 1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை ஆரம்பித்து இன்று வரை சுமார் இரண்டு இலட்சம் பேரை படுகொலை செய்துள்ளது.

சர்வதேசம், தமிழர்களின் அரசியல் குறிக்கோளுக்கு ஆதரவளிப்பதற்கு தயங்குகின்ற போதிலும், தமிழர்களின் அரசியல் குறிக்கோள்களுக்கு எதிராக செயற்படுவதுடன் சிங்கள அரசாங்கம் படைகளும் தமிழர்களை கொலை செய்து வருவதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னியில் இலங்கைப்படையினர் எறிகணைகளையும், பல்குழல் பீரங்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக பெண்கள் சிறுவர்கள் உட்பட்ட பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரையிலான மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்
இந்தநிலையில், ஏற்கனவே இரண்டாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஐயாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இது 21 ஆம் நூற்றாண்டில் தமிழீழமும் தமிழர்களும் சந்தித்த பாரிய இனப்படுகொலையாகும் என நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என எதிர்பார்க்கின்ற வேளையில் தமிழ் மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, சர்வதேசம் , தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த முன்வரவேண்டும். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதை விடுத்து. இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும் என நடேசன் கோரியுள்ளார்.

அத்துடன் சர்வதேச சமூகம், தமது அதிகாரங்களை பயன்படுத்தி, போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வந்து வன்னியில் உள்ள தமிழர்களை பாதுகாப்பதுடன் அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் நிவர்த்திக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தநிலையில் போரை நிறுத்தி அரசியல் தீர்வு ஒன்றுக்காக தாம் பேச்சு நடத்தவும், ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்


சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.
"தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!
நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.
அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!
உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள். எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.



அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!
எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!
எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!
போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.

ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.
சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் 'ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.'

'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.

அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!
சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!
நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்"
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"
இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.

சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் புலிகளின் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளான

கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்



ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம்

தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பில் தாக்குதல்களை நடத்தியுள்ளதுன. இதன்போது கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது கவலைக்கிடமாக இருந்த 2 பேர் பலியாகியதாகவும் 5 விமானப்படையினர் உட்பட 47 காயமடைந்ததாகவும் அதில் மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மற்றும் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அருகில் உள்ள சிறிலங்கா வான் படைத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் (ராடார்) அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

அதனையடுத்து கொழும்பு நகரம் முற்றாக மின்சாரம் தடைப்பட்டும் தொலைபேசி துண்டிக்கப்பட்டும் இருந்தது. இதனால் இரண்டு மணித்தியாலம் மின் வெளிச்சம் எதுவும் இன்றி கொழும்பு நகரம் இருளில் மூழ்கியிருந்தது. கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளன என்றும் இதனால் "இறைவரி திணைக்கள கட்டிடம் சேதமடைந்ததாகவும் அங்கிருந்த பலர் காயமடைந்ததாகவும்" இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறினார்.

பாரிய சத்தத்துடன் இந்தக் குண்டு வெடித்த போது 13 மாடிகளைக் கொண்ட இந்த பாரிய கட்டிடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் கட்டிடத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக் கிடக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகின்றது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வான் படை தலைமை அலுவலகத்தை இலக்கு வைத்தே விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் இலக்குத் தவறி அதற்கு முன்பாகவுள்ள உள்நாட்டு இறைவித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு விழுந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்துள்ள இலங்கை வங்கிக் கட்டடம் உட்பட பல கட்டடங்களும் சேதமடைந்திருக்கின்றன.

சம்பவத்தையடுத்து பாதையை மூடித் தடை விதித்துள்ள படையினர் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கியிருக்கலாம் என்பதால் தேடுதலை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு விமானம் விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் உடைவுகளையும் விமானியின் சடலத்தையும் படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இரண்டாவது வானூர்தி புத்தளம் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவினை இன்றிரவு பிறப்பித்திருக்கின்றது.

இதனையடுத்து யாழ்ப்பாணத்திலும் முழுமையான மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரியப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் குறித்து சுயாதீனமான தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.