கொழும்பு நகருக்குள் பிரவேசித்து வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடத்திய புலிகளின் விமானம் ரேடரில் பதிவான காட்சிகள்
போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு நகருக்குள் பிரவேசித்து தாக்குதல் நடத்திய கரும்புலிகளின் விமானம் ரேடரில் பதிவான காட்சிகள்
தலைப்புகள்
போர்
தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் வான் புலிகள் குண்டுகளை வீசினர்: கொழும்பு இணையத் தளம்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வானூர்திகள் குண்டுகளை வீசிய பின்னர் இலக்கு நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வான்படை தலைமையகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்திய வானூர்தியும் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது தாக்குதலை நடத்திய வானூர்தியும் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர் தலா இரண்டு குண்டுகளை வீசியுள்ளன.
வான்படை தலைமையகம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு வீழ்ந்து வெடித்துள்ளது.
ஆனால், கட்டுநாயக்க பகுதியில் தாக்குதல் நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு இலக்கை நோக்க தாழ்வாக பறந்த வேளை படையினரின் பீரங்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளது.
இதனிடையே, இத்தாக்குதலில் வான்படை தலைமையகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதுடன், அதன் அதிர்வலைகளே இறைவரி திணைக்களத்திற்கும் அதிக சேதங்களை விளைவித்துள்ளது.
வான்படை தலைமையகம் மீதான தாக்குதலில் இரு உயரதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வான்படை தலைமையகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்திய வானூர்தியும் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது தாக்குதலை நடத்திய வானூர்தியும் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்னர் தலா இரண்டு குண்டுகளை வீசியுள்ளன.
வான்படை தலைமையகம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு வீழ்ந்து வெடித்துள்ளது.
ஆனால், கட்டுநாயக்க பகுதியில் தாக்குதல் நடத்திய வானூர்தி குண்டுகளை வீசிவிட்டு இலக்கை நோக்க தாழ்வாக பறந்த வேளை படையினரின் பீரங்கி சூட்டுக்கு இலக்காகி உள்ளது.
இதனிடையே, இத்தாக்குதலில் வான்படை தலைமையகம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதுடன், அதன் அதிர்வலைகளே இறைவரி திணைக்களத்திற்கும் அதிக சேதங்களை விளைவித்துள்ளது.
வான்படை தலைமையகம் மீதான தாக்குதலில் இரு உயரதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









தலைப்புகள்
போர்
வான் கரும்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையம் மூடப்பட்டது
சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து, வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.
வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது.
இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்ளக்கிழமை இரவு 10:30 நிமிடமளவில் ஹொங்ஹொங் நாட்டுக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இரவு 12:25 நிமிடமளவில் பாங்கொக் நகருக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும், அதிகாலை 2:20 நிமிடமளவில் சென்னைக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இடைநிறுத்தப்பட்டது.
இதனிடையே, உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிட தொகுதி வான் கரும்புலிகளின் தாக்குதலால் பாரிய சேதத்தை சந்தித்துள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மூடப்பட்டு அங்கிருந்த வான்படை வானூர்திகள் இரத்மலானை பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததுடன் மொத்தமாக 50 பேர் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கரும்புலித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் வானூர்திகள் இரண்டும் கொழும்பில் நீண்ட நேரமாக தாழ்வான பறப்பை மேற்கொண்டே தாக்குதல்களை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது.
இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்ளக்கிழமை இரவு 10:30 நிமிடமளவில் ஹொங்ஹொங் நாட்டுக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இரவு 12:25 நிமிடமளவில் பாங்கொக் நகருக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும், அதிகாலை 2:20 நிமிடமளவில் சென்னைக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இடைநிறுத்தப்பட்டது.
இதனிடையே, உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிட தொகுதி வான் கரும்புலிகளின் தாக்குதலால் பாரிய சேதத்தை சந்தித்துள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மூடப்பட்டு அங்கிருந்த வான்படை வானூர்திகள் இரத்மலானை பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததுடன் மொத்தமாக 50 பேர் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கரும்புலித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் வானூர்திகள் இரண்டும் கொழும்பில் நீண்ட நேரமாக தாழ்வான பறப்பை மேற்கொண்டே தாக்குதல்களை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலைப்புகள்
போர்